ஜாதிய படம் எடுப்பதில் வல்லவரான பா ரஞ்சித் பட்டறையில் இருந்து வந்த மாரி செல்வராஜ் இயக்கி இருக்கும் படம் மாமன்னன்.
ஒரு காலகட்டத்துல திரைப்படங்கள் எடுத்துகிட்டா ரஜினி படமும், கமல் படமும் வெளியாகும் போது ரசிகர்களிடையே சண்டை என்பார்கள்.
இயக்குனர்கள் பா.ரஞ்சித்தும் அவரின் உதவியாளர் மாரி செல்வராஜ் வந்த பிறகு அவர்கள் இயக்கும் படங்களுக்குளேயே சண்டைகள் நடப்பது பெரிதாகிவிட்டது.
இது அடுத்த தலைமுறையின் ஆரோக்கியமான விஷயம் அல்ல.
உதயநிதியின் கடைசி படம் என்பதாலும், வடிவேலுவின் மாறுபட்ட கதாபாத்திரம் கொடுத்த ஈர்ப்பினாலும் மிகப்பெரிய எதிர்பார்ப்போடு வெளிவந்திருக்கும் படம் “மாமன்னன்” .
இதற்காக பேச்சுவார்த்தை நடத்த வரும் இடத்தில் வடிவேலு சரிசமமாக நடத்தப்படாததை கண்டு கோபமடைந்த உதயநிதி ஃபஹத்தை அடிக்கிறார். இதனைத் தொடர்ந்து கட்சியில் எழும் பிரச்சினையால் ஃபஹத் வேறு கட்சிக்கு செல்கிறார். சட்டசபை தேர்தலும் வருகிறது. ச.ச.ம.க கட்சி சார்பில் வடிவேலு நிற்கிறார். அந்த தேர்தலில் அவர் ஜெயித்தாரா? இல்லையா? என்பது தான் மாமன்னன் படத்தின் கதை.
வடிவேலுவின் திரை வாழ்வில் மிகப்பெரிய மைல்கல் என்றே இப்படத்தை சொல்லலாம். அந்தளவிற்கு இதுவரை நாம் பார்க்காத வகையில் வடிவேலு திரையில் அசைத்திருக்கிறார். பட்டியலின மக்களின் தலைவனாகவே வாழ்ந்திருக்கிறார். எப்போதுமே இறுக்கமாக இருக்கும் அவரது முகமும்,உடல் மொழியும் பல இடங்களில் நம்மை கலங்க வைக்கிறது. மறுபுறம் சாதி வெறி ஊறிய ஒரு கொடூர வில்லனாக திரையில் மிரட்டி இருக்கிறார் பஹத் பாசில்.
உயர் ஜாதிக்கும், கீழ் சாதிக்கும் உள்ள வேறுபாட்டையும், கீழ் சாதியினர் படும் துன்பங்களையும் அழுத்தமாக திரையில் காட்டுவதே மாரி செல்வராஜின் ஸ்டைல். அதே பாணியை தான் இப்படத்திலும் அவர் கையாண்டிருக்கிறார். ஆனால் இந்த முறை அவருடைய திரைக்கதையின் அழுத்தம் பல மடங்கு உயர்ந்திருக்கிறது. அவருடைய ஒவ்வொரு காட்சிகளும், வசனங்களும் பட்டியலின மக்களின் வலியையும்,வாழ்க்கை முறையையும் நம் கண் முன்னே காட்டி நம்மை கலங்க வைக்கிறது.
இந்தப் படத்தின் மற்றொரு ஹீரோவாக இருப்பது இசை புயல் ஏ.ஆர்.ரகுமானின் இசை. பல இடங்களில் மௌனமான காட்சிகளையும் தன்னடைய பின்னணி இசையின் மூலம் உயிற்கொடுத்திருப்பது பிரமிக்க வைக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக வெறும் கமர்சியல் படங்களிலேயே அவரது இசையை பார்த்த நமக்கு, இப்படத்தில் அவருடைய இசை வேறொரு பரிமாணத்தை கொடுத்திருக்கிறது.இருந்தாலும் ஆஸ்கர் நாயகனை இப்படி ஒப்பாரி பாட வைப்பதா என்ற கேள்வியும் நம் மனதிற்குள் எழுவது உண்மை.
ஒட்டுமொத்த படத்தையும் பார்த்த பிறகு ஒரு குறிப்பிட்ட சாதியை குறி வைத்து இப்படம் எடுத்ததற்கு படம் பார்க்கும் அனைத்து ஜாதியினரும் சற்று முகம் சுளிக்க வைப்பது நிஜம்.
இனி வரும் படங்களில் இயக்குனர் சற்று யோசிக்கவும்.
இதில் இயக்குனர் கவனத்திற்கு முக்கியமா சொல்லக்கூடிய விஷயம் என்னவென்றால்
ஜாதியால் நடந்த கொடுமைகளை எந்த வருடங்கள் நடந்ததோ அதோடு மறந்து விடுவது நல்லது .15 ,20 வருடங்கள் கழித்து திரும்ப அது படமாக எடுத்து இன்றைய இளைய தலைமுறைக்கு இதை திரைப்படமாக பார்க்கும் பொழுது அவர்கள் மனதில் ஜாதி வெறியையும், இனத்தூண்டுதல்களையும் நாம் வலுக்கட்டாயமாக புகுத்துகிறார் இயக்குனர் என்றே தோன்றுகிறது.
இளைய தலைமுறையின் எதிர்காலம் கருதி இனி வரும் படங்களில் இது போன்ற ஜாதியை மையமாக வைத்து எழுதும் கதைகளை விட்டு விட்டு நல்லதொரு பொழுதுபோக்கான கதைகளை இயக்கும்படி இயக்குனருக்கு ஒரு வேண்டுகோள் வைக்கின்றோம்.