டாக்ஸிக் – விமர்சனம்
இந்திய அளவில் டாப் ஸ்டாராக மாறியிருக்கும் யஷ் மற்றும் நயன்தாரா, கியாரா அத்வானி, ருக்மிணி வசந்த்,ஆகியோர் நடித்துள்ள திரைப்படம் டாக்ஸிக்.
1947யில் இந்தியா விடுதலை பெற்றுவிட்டாலும், கோவாவில் போர்ச்சுகீசியர்களின் ஆதிக்கம் தொடர்ந்து வருகிறது. சால்வடார் என்ற நபர் கேங்ஸ்டர்களுக்கு சிம்மசொப்பனமாக விளங்க, அவருக்கு துணையாக ராயாவும் (யஷ்), அவரது அக்கா கங்காவும் (நயன்தாரா) உள்ளனர்.
தங்கள் பெற்றோரை கொன்றவனை பழிதீர்க்கும் ராயாவும், கங்காவும் போதைப்பொருள் கடத்தலில் அடுத்த கட்டத்திற்கு செல்கின்றனர். மது, பெண்கள் என டாக்ஸிக் ஆக வாழும் ராயா, தனது பாஸ் சால்வடாரின் மகள் ரெபெக்கா (தாரா சுதாரியா) உடன் நெருக்கமாகிறார்.
இந்த விஷயம் சால்வடாருக்கும் தெரிய வந்ததும் ராயாவுக்கும், ரெபெக்காவுக்கும் திருமணம் முடிவாகிறது. அதே சமயம் கோவாவிற்கு சர்க்கஸ் நிகழ்ச்சி நடத்த வரும் நாடியா உடனும் ராயா நெருக்கம் கொள்கிறார்.
மலையாள திரையுலகில் ஹீரோயினாக வலம் வந்து, பின் இயக்குநராக மாறி லையர்’ஸ் டைஸ் மற்றும் மூத்தோன் ஆகிய படங்களை இயக்கியவர் கீது மோகன்தாஸ்.
அவரது இயக்கத்தில் யஷ் நடிக்கும் படம் என்பதும், நயன்தாரா மற்றும் கியாரா, ருக்மிணி வசந்த், ஹுமா குரேஷி என முன்னணி நடிகைகளும் இடமபெற்றுள்ளார்கள் என்பதுமே டாக்ஸிக் படத்திற்கு மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பை தூண்டியது.
காதலா? காமமா? என்று தெரியாமலேயே கியாராவுடன் பழகும் ராயா சம்பந்தப்பட்ட காட்சிகளை பல படங்களில் பார்த்திருப்போம். என்றாலும் அந்த கதாபாத்திரங்களும் பேசும் வசனங்கள் காட்சிகளுக்கு வலுசேர்க்கின்றன. கேங்ஸ்டர் படங்கள் என்றாலே வன்முறை இருக்கும். இதில் அதையெல்லாம் தாண்டிவிட்டார்கள் என்றே கூறலாம்.
அதன் பின்னரான இரண்டாம் பாதியில் பொறுமையை சோதிப்பது படத்தின் நீளம்தான். முக்கியமான ட்விஸ்ட் வரும் வரை என்னடா நடக்குது இங்க என்றே நம்மை கேட்க வைத்துவிடுகிறார் இயக்குநர். அதனாலேயே ட்விஸ்ட் வெளியானதும் அதனை ஏற்றுகொள்ளக் கொள்ள முடியவில்லை.
ருக்மிணிக்கு அவ்வளவு பெரிய ரோல் இல்லை. தாரா மற்றும் ஹுமா குரேஷியின் கதாபாத்திரம் கச்சிதம். டெக்னிக்கலாக படம் மிரட்டலாக பிரம்மாண்டமாக உள்ளது. 1947, 1960களின் காலகட்டத்தில் கோவாவில் இருப்பது போன்ற உணர்வை தந்துள்ளனர் படக்குழுவினர். ரவி பஸ்ரூரின் பின்னணி இசையும், வசனங்களுக்கும் படத்திற்கு மிகப்பெரிய பலம்.
மொத்தத்தில் இந்த டாக்ஸிக் படம் பார்வையாளர்களை எரிச்சல் ஊட்டும்.
படம் பார்த்து வெளியே வரும் ரசிகர்களிடம் கதை என்ன என்று கேட்டால் மண்டையை சொரிந்துகொண்டே ஓடுவது நிச்சயம்.









