‘செவ்வாய்கிழமை’ – விமர்சனம்
அஜய் பூபதி இயக்கத்தில் பயல் ராஜ்புத் நடிப்பில் உருவாகி உள்ள மங்களவாரம் படம் தமிழில் செவ்வாய்க்கிழமை எனும் டைட்டிலில் வெளியாகி உள்ளது.
ஆர்.எக்ஸ். 100 படத்தை இயக்கிய அஜய் பூபதி இயக்கத்தில் அழகான ஹீரோயினாக நடித்த பயல் ராஜ்புத் இந்த செவ்வாய்க்கிழமை படத்தில் நடித்திருக்கும் நடிப்பு அபாரம். இப்படி பயல் ராஜ்புத் நடிப்பார் என நினைத்தே பார்க்கவில்லை.
பயல் ராஜ்புத்தை தொடர்ந்து வெகுவாக படத்தின் படத்தை பார்க்கும் பொழுது வெகுவாக கவர்ந்திருக்கிறார்.
பாயல் ராஜ்புத்துக்கு வித்தியாசமான வியாதி இருப்பது போன்று கதையை அஜய் பூபதி உருவாக்கி உள்ளார் என்றும் இரண்டாம் பாதி முழுக்க பாயல் ராஜ்புத்தின் நடிப்பு மிரட்டுகிறது.
இந்த படத்திற்கு அவரது நடிப்புக்காக எந்த ஒரு நடிகையும் இது மாதிரியான கேரக்டரில் நடிக்க தைரியம் வேண்டும் என்றும் பெண்களை நிமிர செய்கிறது இவரது கதாபாத்திரம்..
சப்-இன்ஸ்பெக்டராக வரும் நடிகை நந்திதா ஸ்வேதா முகத்தில் தழும்புடன் வந்து மிரட்டுகிறார்.அவரது மிரட்டல் ஒரு பக்கம் இருந்தாலும் அவரது முக பாவனைகள் வேறு மாதிரி நம்மை பார்க்க பதபதைக்க வைக்கிறது.
படத்தில் முதல் பாதி ஒரு மாதிரியாக இருந்தாலும் இரண்டாம் பாதியில் வரும் அதிர்ச்சியூட்டும் சம்பவங்கள் படம் பார்க்கும் ஒவ்வொருவரையும் பதபதைக்க வைப்பது நிஜம்.
அவர்தான் படத்தை தொடங்கி படத்தை முடித்து வைப்பதும் அவர்தான் சூப்பர்.
கதையுடன் காட்சிகள் அனைத்தும் கோர்வையாக நகர்ந்திருக்கின்றன இதற்கு இயக்குனருக்கு ஒரு வாழ்த்துக்கள்.
மொத்தத்தில் இந்த ‘செவ்வாய்க்கிழமை’ படம் வெள்ளிக்கிழமை திரையில் வந்தாலும் வெற்றிக்கிழமையாக திகழும்…









