நிஜம் சினிமா தனது முதல் தயாரிப்பில் வெள்ளகுதிர
நிஜம் சினிமா தயாரிப்பில் சரண்ராஜ்செந்தில்குமார் இயக்கத்தில் ஹரிஷ் ஓரி, அபிராமி போஸ் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘வெள்ளகுதிர’. இம்மாத இறுதியில் வெளியாக இருக்கும் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது
சிறந்த நடிகருக்கு 26 படத்திற்கு 23,சிறந்த தொழில்நுட்ப கலைஞருக்கு ஆறு என பெற்றுள்ளது..
நடிகர் விதார்த் பேசுகையில்,வெள்ள குதிர யை தாண்டி இந்த படத்தின் கதாநாயகனான ஓரிக்கும் எனக்கும் உள்ள நட்பு முறையை பற்றி பேசலாம்னு இருக்கேன்.. பரட்டை என்கிற அழகுசுந்தரம் படத்தில் இருந்து எனக்கு ஓரி அறிமுகம் கூத்துப்பட்டறை நண்பர்களை தாண்டி வெளியில் எனக்கு நண்பர்கள் கிடையாது அப்படி வெளியில் இருக்கும் ஒரே நண்பர் ஓரிதான்.. அவன் எனக்கு முக்கியமான நண்பன் அவன் வீட்டிற்கு போய் வெளியில் வந்த நேரத்தில் எனக்கு மைனா படம் கிடைத்தது. மைனா படம் போல் இந்த படமும் சிரமப்பட்டு எடுத்திருக்கு… இப்படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்..
நடிகை அபிராமி போஸ் பேசுகையில். வெள்ள குதிர எனக்கு முதல் தமிழ் படம் மலையாளம் மராட்டி ஹிந்தி என பல மொழிகளில் நடித்திருந்தாலும், வெள்ள குதிர எனக்கு மிகவும் முக்கியமான படம். தனித்தன்மை வாய்ந்த வாழ்வியல் கதையாக இருந்ததாலும், பெண் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இருந்ததாலும் ஒற்றுக் கொண்டேன். குழுவினருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
இசையமைப்பாளர் பரத் ஆசீவகன் பேசுகையில் மூன்று தலைமுறைக்கான இசை குடும்பம் எங்களுடையது.. வெள்ளகுதிர படத்தில் மண்வாசனைகேற்ப மண் மணம் மாறாமல், வரிகளுக்கு ஏற்ப இசையமைத்துள்ளேன்
இயக்குனர் அஜயன் பாலா பேசுகையில்எந்த ஒரு நட்சத்திர முகமும் இல்லாத இப்படத்தை வெளியில் கொண்டு வர முனையும் ட்ரீம் வாரியர்ஸ் திரு குகன் அவர்களுக்கு நன்றி என்றும் தமிழ் பண்பாட்டை கொண்டு வந்திருக்கும் இப்படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்
திரு குகன் அவர்கள் பேசுகையில் வெள்ள குதிரை படத்தில் இருக்கும் புது தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவறையும் வரவேற்கிறேன். வெள்ள குதிர படத்தை பொருத்தவரையில் அது பெற்றிருக்கும் விருதுகள் அனைத்து தேசத்திலும் ஒருமித்த கருத்தை காண்பிக்கிறது. ஒரு நல்ல திரைப்படம் தனக்கு என்ன வேண்டுமோ அதை தானாக எடுத்துக் கொள்கிறது என்பதை நான் நம்புகிறவன். அந்த மாதிரியான ஒரு நல்ல திரைப்படம் தான் வெள்ளகுதிர. வணிகத்தை தாண்டி ஒரு நல்ல திரைப்படத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் பெருமைப்படுகிறோம்
தயாரிப்பாளர் தனஜெயன் பேசுகையில்.. நேற்று மட்டுமே ஒரு ஒன்பது திரைப்படங்கள் வெளியாகி இருக்கு… இப்படி சினிமாவை நாம் ஒரு கலையாக பார்க்காமல் வியாபாரமாக பார்த்து ரிலீஸ் பண்ணும் போது நல்ல திரைப்படங்களும் காணாமல் போகிறது. எந்த ஒரு கிராஃப்ட்டும் இல்லாமலேயே படம் எடுக்கும் நிலையும் தற்போது வந்துள்ளது. குறைந்த அளவில் படங்கள் வருமேயானால் அதன் தரமும் நமக்கு தெரிய வரும். நல்ல திரைப்படங்களாக ஒரு நான்கு திரைப்படங்கள் வாரத்திற்கு வந்தது என்றால் அதை மக்களிடம் ஈசியாக கொண்டு சேர்க்க முடியும்.. அந்த வகையில் வெள்ளகுதிர திரைப்படம் நல்ல திரைப்படமாக அமைந்திருக்கு.
இயக்குனர் ஆர் வி உதயகுமார் பேசுகையில்… இயக்குனர் சரண்ராஜ் செந்தில்குமார் ஒரு மலையையும், ஆளையும் பார்த்து கதை எழுதி இருக்கிறாய் பாராட்டுதலுக்குரியது.. ஒரு சுகமான சுமையாக இப்படத்தை சுமந்து இருக்கிறாய் இப்படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்
இயக்குனர் ஆர்கே செல்வமணி பேசுகையில்… ஒரு திரைப்படம் வெற்றி படம் தோல்வி படம் என்பது வேறு ஆனால் திரைப்படம் திரைப்படமாகவே இப்பொழுது வருவதில்லை அது நினைத்தால் எனக்கு இப்பொழுது அவமானமாகவே இருக்கிறது.. எங்களது உறுப்பினர்கள் இருந்தால்தான் குறைந்தபட்சமாக ஒரு நல்ல திரைப்படமாகவாது உருவாகி வரும் என்பது குறிப்பிடத்தக்கது..
இறுதியாக தயாரிப்பாளர், நடிகருமான ஹரிஷ் ஓரி அர்த்தநாரி பத்திரிக்கை நண்பர்களுக்கு நன்றி தெரிவித்தார்..









