நடுத்தர வர்க்க வாழ்க்கையின் நிதி நெருக்கடி, தந்தை-மகன் உறவு மற்றும் குடும்பக் கௌரவம் ஆகியவற்றை மையமாகக் கொண்ட கதை.
சமுத்திரக்கனியின் இயல்பான நடிப்பு மற்றும் கௌதம் வாசுதேவ் மேனனின் திரை இருப்பு படத்திற்கு பலம் சேர்க்கிறது. லட்சுமி பிரியா, அபிநயா ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
சமுத்திரக்கனி அவர் திறமைக்கு எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அந்த கதாபாத்திரத்தை நம் கண் முன் நிறுத்துவார் அதற்குப் பொருத்தமாகவும் இயல்பாகவும் தன் நடிப்பை வெளிப்படுத்துவார், அவரது மனைவியாக லட்சுமி பிரியா இவரது நடிப்பும் மிகச் சிறப்பாக உள்ளது அதுவும் ஒரு சாதாரண மிடில் கிளாஸ் குடும்பத் தலைவியின் பொறுப்பையும் தன் வலியும் மிக ஆழமாக நடிப்பில் மூலம் செய்துள்ளார்,
கதைக்கு துணை கதாபாத்திரங்களாக வரும் கௌதம் மேனன், அபிநயா மற்றும் மற்ற நடிகர்கள் கதையின் ஓட்டத்தை சீராக முன்னேற்ற உதவுகிறார்கள்.
ஒளிப்பதிவு யுவராஜ் தக்ஷனின் காட்சிக்கு காட்சி அழகாக வடிவமைத்து உள்ளார்.
இயக்குனர் ராம் சக்ரி, “கடன் என்பது தேவைக்கான கருவி; ஆடம்பரத்திற்கான சிக்கல் அல்ல” என்ற கருத்தை மையமாகக் கொண்டு கதையை நகர்த்துகிறார். மேலும், குடும்ப பொறுப்புகளுக்காக வெளிநாட்டில் வேலை செய்யும் மனிதர்களின் மனநிலையையும் உணர்ச்சிப்பூர்வமாக தொட்டுச் செல்கிறார்.
மொத்தத்தில் கார் மேனி செல்வம் நம் வாழ்க்கையை ஆசை என்ற ஒரு கருவி கடனாக மாறி நம் வாழ்க்கையை சிதைக்கிறது நம்மால் உணர முடியும்.
நடுத்தர மக்களின் வாழ்க்கையை சற்று வலியுடன் சொல்லி இருக்கிறார் இயக்குனர்.









