நடிகர் மாதவன் இயக்கி நடித்துள்ள படம் “ராக்கெட்டரி”. படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் இறுதிகட்ட பணிகள் மிகவும் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இப்படத்தின் பணிகள் முடிந்த கையோடு மாதவன் நடிக்கும் அடுத்த படம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.
இந்த படத்தில் அனுஷ்கா, அஞ்சலி மற்றும் ஷாலினி பாண்டே ஆகிய மூன்று நாயகிகள் நடிக்கின்றனர்.
தெலுங்கில் உருவாகவுள்ள இந்த படத்தை ஹேமந்த் மதுல்கர் என்பவர் இயக்கவுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.
கிரண் ஸ்டுடியோஸ், காஸ்மோஸ் எண்டர்டெயின்மெண்ட்ஸ் மற்றும் பீப்பிள் மீடியா பேக்டரி ஆகிய நிறுவனங்கள் இணைந்து இந்த படத்தை தயாரிக்கவுள்ளன.







