

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் முக்கிய நடிகையாக வலம் வந்தவர் கிரன். அழகும் கவர்ச்சியும் சேர்ந்தே இருந்ததால் தமிழ் இயக்குனர்களுக்கு அவரை விட்டு விட மனம் இல்லை. ஆகையால் தொடர்ந்து சீயான் விக்ரம், அஜீத் போன்றோருடன் ஜோடி போட்டார்.
அதன் பிறகு வழக்கம்போல் மார்க்கெட் சரிந்தவுடன் திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார். நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் தமிழ் சினிமாவில் அவ்வப்போது தலைகாட்டி வந்தார். சுந்தர் சி இயக்கத்தில் வெளிவந்த ஆம்பள திரைப்படத்தில் 21 வயது பெண்ணுக்கு அம்மாவாக நடித்திருந்தார்.

அதேபோல் சுந்தர் சி ஹீரோவாக நடித்த முத்துனகத்திரிகா என்ற படத்திலும் ஹீரோயின் அம்மா வேடத்தில் நடித்தார். அதன் பிறகும் கண்டுகொள்ளாத தமிழ் சினிமாவை விட்டு சற்று ஒதுங்கியே உள்ளார்.


ஆனால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி நிரம்பிய புகைப்படங்களை வெளியிடுவதை தொடர்ந்து செய்து வருகிறார். கண்டபடி உடையணிந்து கிரண் காட்டுத்தனமான கவர்ச்சியில் புகைப்படங்களை வெளியிட்டு சமூக வலைதளங்களை அதிர வைத்துள்ளார்.

இதுக்கு நீங்க ஆபாச படத்தில் நடித்து இருக்கலாம் என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் டூ பீஸில் கிரண் வெளியிட்டிருக்கும் இந்த புகைப்படங்கள் ரசிகர்களை முகம் சுளிக்க வைத்துள்ளது.ரசிப்பவர்கள் ரசித்து ஜொள்ளு விட்டும் வருகின்றனர்