அடிச்சி தூள் கிளப்பும் அண்ணாச்சி, துரை செந்தில்குமாரின்விறு விறு திரைக்கதையில் நிமிர்ந்து நிற்கும் லீடர்.
தென் தமிழகத்தில் ஒரு ஹார்பர்-ல் சட்டத்திற்கு புறம்பாக ஒரு கண்டெய்னர் வருகிறது. அந்த ஊரில் லெஜண்ட் சரவணன் தன் மகளோட ஒரு மெக்கானிக் கடையில் மெக்கானிக் ஆக வாழ்க்கையை நடத்தி வருகிறார், அம்மா இல்லாமல் தன் மகளை உயிராக நினைத்து வாழ்கிறார்.
அதே நேரத்தில் இன்ஸ்பெகர் ஆண்ட்ரியா அந்த கண்டெய்னரில் ஏதோ உள்ளது. கண்டிப்பாக அதை வெளியே கொண்டு வர வேண்டும் என போராட, ஒரு கட்டத்தில் சரவணனுக்கு அந்த ஹார்பரில் சால்ட் என்ற தாதா கார்-யை சர்விஸ் விட்டு அடிக்கடி அங்கு செல்லும் நிலை உருவாகிறது.
ஆனால், அதன் பின்பு தான் தெரிகிறது, இந்த அத்தனை ஸ்கெட்ச் போட்டது ஆண்ட்ரியா இல்லை, சரவணன் தான், எதற்காக இப்படி செய்தார், ஏன் செய்தார் என்பதன் மர்மமே மீதிக்கதை.லெஜண்ட் சரவணன் முதல் படத்தை விட அத்தனை முன்னேற்றம், மகளுடன் பாசம், மகளுக்கால எந்த எல்லைக்கும் செல்லும் போரட்டம், ஆக்ஷன் என ஒரு மாஸ் ஹீரோவாக ஜெயித்துவிட்டார், கண்டிப்பாக அடுத்தடுத்து இவர் படங்கள் மீது ரசிகர்களுக்கு எதிர்ப்பார்ப்பு உருவாகும் படி ஒரு படத்தை கொடுத்துவிட்டார்.
இந்த அத்தனை கிரிடிட்ஸும் இயக்குனர் துரை செந்தில்குமாருக்கு தான், சரவணன் அவர்களுக்கு என்ன வருமோ அதை சரியாக பயன்படுத்தி சூப்பராக கொடுத்துள்ளார்.
என்ன கதைக்களம் தான் நாம் பல மாஸ் படங்களில் பார்த்தது, ஆனால், அதில் திரைக்கதையை வேகவேகமாக அமைத்தது படத்திற்கு பலமாக உள்ளது, படம் ஆரம்பித்து கதைக்குள் செல்லுவரை கொஞ்சம் பொறுமையாக சென்றாலும் சரவணன் vs சால்ட் என்று மாறும் போது கதை சூடு பிடிக்க, இடைவேளை மற்றும் கிளைமேக்ஸ் ட்ரெயின் சண்டை காட்சி பீக் ஆகிறது.டெக்னிக்கலாக படம் ஒளிப்பதிவு, எடிட்டிங் எல்லாமே சூப்பர், அதிலும் மகேஷ் மேத்யூவின் சண்டை காட்சிகள் அபாரம், அற்புதம் அதன் பிறகு ஜிப்ரானின் பின்னணி இசை மிரட்டல்.
ஒரு நடிகனுக்கு தனக்குள் இருக்கும் நடிப்பை கொண்டு வர வேண்டும் என்றால் திறமையான இயக்குனரால் மட்டுமே முடியும் என்பதை லெஜெண்ட் சரவணனுக்கு துறை செந்தில்குமார் நிரூபித்து இருக்கிறார்.
மொத்தத்தில் லீடர் தமிழ் சினிமாவில் இரண்டாம் பாகத்தின் லீட் காம்போ.









