சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீ லீலா நடிப்பில் ஜி.வி.பிரகாஷ் குமார் இசையில் சுதா கொங்கரா இயக்கத்தில் பரபரப்பான சூழ்நிலைகளுக்கு இடையே வெளிவந்திருக்கும் படம் பராசக்தி.
முழுக்க முழுக்க தமிழுக்கும் தமிழர்களுக்கும் பெருமை சேர்க்கும் விதமாக வந்திருக்கும் படமே பராசக்தி.
ஹிந்தி திணிப்புக்கு எதிராக புறநானூறு என்ற குழு மூலம் சிவகார்த்திகேயன் போராடுகிறார். படத்தின் முதல் காட்சியிலேயே ஒரு இரயிலை எரிக்கிறார். இதை தொடர்ந்து ரவிமோகன் இந்த கும்பலை பிடிக்க வேண்டும் என கங்கனம் கட்டி சுற்றுகிறார்.
அப்போதும் ஹிந்தி படித்தால் தான் இனி வேலை என்ற நிலை உருவாக, சிவகார்த்திகேயன் கண்முன் ஒரு இளைஞன் இறக்க, சிவகார்த்திகேயனுக்கும் வேலை கிடைக்காமல் போக, மீண்டும் போராட்டத்தை கையில் எடுக்கும் சிவகார்த்திகேயன் வென்றாரா, ரவிமோகன் இவர்களை பிடித்தாரா? என்ற புரட்சி போராட்டமே பராசக்தி.சிவகார்த்திகேயன் செழியனாகவே வாழ்ந்துள்ளார். போராட்டம் என வாழ்க்கையை வாழ்ந்து, ஒரு இழப்பிற்கு பிறகு போராட்டத்தை கைவிட, இங்கு போராடினால் தான் எதுவும் கிடைக்கும் என்ற நிலையில் மீண்டும் போராட்ட களத்தில் குதிக்க, கடைசி வரை இரத்தம் சிந்தி அவர் போராடும் காட்சிகள் நடிகனாக சிவா பல மடங்கு உயர்ந்து விட்டார். கண்டிப்பாக சிவாவுக்கு இது மைல்கல் படம் தான்.
ரவி மோகன் படம் முழுவதும் அரசாங்கத்திற்கு ஆதரவான ஒரு அதிகாரியாக, எத்தனை உயிர் போனாலும் சரி, நான் நினைப்பது நடக்க வேண்டும் என அவர் செய்யும் வேலைகள் நெஞ்சை பதபதைக்க வைக்கிறது. மிரட்டல் பெர்ப்பாமன்ஸ்.

படமே ஹிந்தி திணிப்புக்கு எதிரானது என்பதால், பல வரலாற்று நிகழ்வுகளை கற்பனை, சித்தரிக்கப்பட்டவை என்று போட்டாலும் அது பார்க்கும் ரசிகர்கள் படத்தோடு ஒன்றி கமெண்ட் அடித்து கட் செய்த காட்சியையும் ரசிகர்கள் புரிந்து கொள்கின்றனர்.
ஆர்ட் ஒர்க் அப்படியே நாமும் 1960-களுக்கு சென்ற அனுபவம், படத்தின் கதை மாந்தர்கள் தேர்விலேயே படம் செம ஸ்கோர் தான், மைக்கெல் ரெட்டி ரெபரன்ஸ், பாசில் ஜோசம் கேமியோ என கிளைமேக்ஸ் கூஸ்பம்ஸ் குவிந்து கிடைக்கிறது.
ஜீவி பிரகாஷ் குமாருக்கு நூறாவது படம் பாடல்களிலும் பின்னணி இசைகளும் மிரட்டி இருக்கிறார்.மீண்டும் மீண்டும் சொல்ல வேண்டும் என்றால் சிவகார்த்திகேயனுக்கு இந்த படம் மீண்டும் ஒரு மைல்கல்.
காலங்கள் அழிந்தாலும் சிவகார்த்திகேயன் பட வரிசையில் அமரன், பராசக்தி தவிர்க்க முடியாத படமாக இருக்கும்.
60 வருடங்களுக்கு முன்பு என்ன நடந்தது என்று தெரியாமல் இன்று வாழ்ந்து கொண்டிருக்கும் இன்றைய இளைஞர்களுக்கு இந்த படம் சமர்ப்பணம்.
மொத்தத்தில் இந்த பராசக்தி பரவசமான சக்தி.








