“ட்ரிகர்” திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!!
PRAMOD FILMS சார்பில் பிரதீக் சக்ரவர்த்தி & சுருதி நல்லப்பா வழங்கும், சாம் ஆண்டன் இயக்கத்தில்,அதர்வா முரளி நடிக்கும் திரைப்படம் “ட்ரிகர்” இப்படம் தூண்டல் எனும் அடிப்படையில் புதுமையான திரைகதையில் பரபரப்பான திரில்லராக உருவாகியுள்ளது. இப்படம் செப்டம்பர் 23 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. பட வெளியீட்டை ஒட்டி படக்குழு பத்திரிக்கை ஊடக நண்பர்களை சந்தித்தனர்.
இவ்விழாவினில்
படம் உங்களுக்கு நிச்சயமாக பிடிக்கும்.”

“ ட்ரிகர், நானும் இயக்குனரும் இணையும் இரண்டாவது படம். நல்ல கதைக்கரு உடைய திரைப்படம் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் இந்த திரைப்படத்தை உருவாக்கியுள்ளோம். ஆக்ஷனை தாண்டி படம் உணர்வுபூர்வமான பல விஷயங்களை கொண்டுள்ளது. தயாரிப்பாளர் ஷ்ருதி ஒரு தயாரிப்பாளரை தாண்டி கிரியேட்டிவ்வாக படத்தில் பணிபுரிந்தார். சாம் ஆண்டன் பதட்டமில்லாமல், சாதாரணமாக படத்தை கையாள்வார், அவர் நிச்சயமாக பெரிய இடத்திற்கு செல்வார். அருண் பாண்டியன், சின்னி ஜெயந்த் இருவருடைய நடிப்பும் அபாரமாக இருந்தது. சின்னி ஜெயந்த் சாரை அப்பாவுடன் சூட்டிங் செல்லும் போது பார்த்துள்ளேன் இப்போதும் இளமையாக இருக்கிறார். என்னுடன் காலேஜ் படத்தில் நடிப்பார். படம் தொழில்நுட்ப ரீதியாக பலரது உழைப்பால் நன்றாக வந்துள்ளது. ஒரு நல்ல படத்தை உருவாக்கிய சந்தோசம் எங்களுக்கு இருக்கிறது. இந்த படத்தை குடும்பத்தோடு வந்து அனைவரும் பாருங்கள், இந்த படம் உங்களுக்கு பிடிக்கும் என்று நம்புகிறேன்.”
“என்னுடைய அனைத்து படங்களுக்கும் தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் உங்களுக்கு நன்றி. எந்த வித பதட்டமும் இல்லாமல் இந்த படத்தை முடித்ததற்கு காரணம் தயாரிப்பாளர் கொடுத்த ஒத்துழைப்பு தான். அவர்களுடைய ஒத்துழைப்பு அபாரமானது. அதர்வாவிடம் இந்த கதையை கூறிய போது, அவர் மீண்டும் போலீஸ் கதை என்று யோசிக்காமல், கதையில் உள்ள வித்தியாசத்தை புரிந்து ஒத்துகொண்டார். அதர்வா உடைய கடின உழைப்பு படத்திற்கு மிகப்பெரிய பலம். தன்யா அர்பணிப்புடன் மிக நன்றாக நடித்துள்ளார். படத்தின் டிரெய்லருக்கு நேர்மறையான விமர்சனங்கள் வந்தது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.”

“ இந்த கனவு திரைப்படத்தில் இணைந்து இருப்பது எனக்கு மகிழ்ச்சி. ஆக்ஷன் படத்தை இவ்வளவு பெரிய திரைப்படமாக எடுத்தது எங்களுக்கு மகிழ்ச்சி. படத்தை அனைவரும் பாருங்கள் நன்றி. “
ட்ரிகர்” திரைப்படத்தில் தான்யா ரவிச்சந்திரன் கதாநாயகியாக நடித்துள்ளார். அருண் பாண்டியன், சீதா, கிருஷ்ண குமார், வினோதினி வைத்தியநாதன், முனிஷ்காந்த், சின்னி ஜெயந்த், அறந்தாங்கி நிஷா, அன்புதாசன் மற்றும் இன்னும் பல முக்கிய நடசத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர். ஜிப்ரான் இசையமைக்க, கிருஷ்ணன் வசந்த் ஒளிப்பதிவு செய்துள்ளார், ரூபன் படத்தொகுப்பு செய்துள்ளார். திலீப் சுப்பராயன் ஆக்ஷன் கோரியோகிராஃபராக பணியாற்ற, ராஜேஷ் கலை இயக்கம் செய்துள்ளார், தீபாலி நூர் காஸ்ட்யூம் டிசைனராகவும், கோபி பிரசன்னா விளம்பர வடிவமைப்பாளராகவும் பணியாற்றியுள்ளனர். சுரேஷ் சந்திரா & ரேகா D one (மக்கள் தொடர்பு), Lorven Studios (VFX), ஓமர் (நிர்வாகத் தயாரிப்பாளர்) மற்றும் கோகுல்.K (கிரியேட்டிவ் புரடியூசர்) ஆக பணியாற்றியுள்ளனர்.