மனதை வருடும், மண் மணக்கும் காவியம் “சியான்கள்” விரைவில் !
மனதை வருடும், மண் மணக்கும் காவியம் “சியான்கள்” விரைவில் ! K L Productions சார்பில் G.கரிகாலன் தயாரித்துள்ள படம் “சீயான்கள்”. இப்படத்தை இயக்குநர் வைகறை பாலன் இயக்கியுள்ளார். வயது முதிர்ந்த, நம் கிராமத்து முதயவர்கள் 7 பேரின் வாழ்வில் நடக்கும் கதையை, நம் மண் மனம் மாறமல் கூறும் படமாக உருவாகியுள்ளது. மண் சார்ந்த கதைகள் அருகி வரும் காலத்தில் இப்படம் நம் கிராமத்து அழகியலை மீட்டெடுத்து, நம் மீது மண் வாசத்தை, அன்பை தெளிக்கும் படைப்பாக இருக்கும். கரிகாலன், ரிஷா ஹரிதாஸ் நாயகன், நாயகியாக நடிக்க, நளினிகாந்த், பசுபதிராஜ், ஈஸ்வர் தியாகராஜன், சமுத்திர சீனி, சக்திவேல், நாராயணசாமி, துரை சுந்தரம் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளார்கள். விரைவில் வெளியாகவுள்ள இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடந்தது. இயக்குநர் வைகறை பாலன் கூறியதவாது.... வயதான அப்பா, அம்மா நம் எல்லோருக்கும் இருப்பார்கள் அவர்களை நாம் எப்படி பார்த்துகொள்ள வேண்டும் என்பதை நம் கிராமத்து மண் சார்ந்து கூறும் படைப்பாக சீயான்கள் படம் இருக்கும். இப்படத்தில் உண்மையில் நடந்த பல சம்பவங்கள் தொகுத்து அதனை கதையில் சேர்த்திருக்கிறேன். சீயான்கள் கிராமத்து பக்கம் முதியவர்களை அழைக்கும் ஒரு வழக்கு சொல். இப்படம் முதியவர்களின் ...