கழுவேத்தி மூர்க்கன் – விமர்சனம்
அதிரடி ஆக்ஷனில் அருள்நிதி கலக்கும் படம் என்றே சொல்லலாம்.

கரடு முரடான மூர்க்க சாமியும், பொறுப்பான பூமி நாதனும் இருவேறு சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்றாலும் அதை கண்டு கொள்ளாமல் நண்பர்களாய் பழகி வருகின்றனர். இவர்களின் நட்பு அரசியல் தலைவர்களின் ஆதாயத்திற்கு தடையாய் நிற்க இதில் பூமி கொல்லப்படுகிறான். அந்தப்பழி மூர்க்கன் மீது விழுகிறது. அதன் பின்னர் என்ன ஆனது என்பது படத்தின் மீதிக்கதை!

இரு சமுதாயங்களை பற்றிப் பேசும் கதை என்பதால் மிக மிக கவனமாக கையாள வேண்டிய ஆளுமை இயக்குனருக்கு தேவைப்படுகிறது. அப்படிப்பட்ட ஆளுமையாக இருந்து படத்தை எடுத்து இருக்கிறார் இயக்குநர் கவுதம் ராஜ். முதல் பாதியில் சில இடங்களில் ஏற்கனவே நாம் பார்த்து பழகிய காட்சிகள் இருந்தாலும் இரண்டாம் பாதி முழுக்க அனலின் உச்சமாக இருக்கிறது. டி இமானின் பின்னணி இசை படத்திற்கு பெரும் பலமாக இருக்கிறது.
பாடல்கள் சொல்லும்படி இல்லை என்றாலும் பின்னணி இசை பலமாக இருக்கின்றது