அபிஷேக் செளபே இயக்கத்தில் நெட்ஃபிளிக்ஸில் வெளியாகியுள்ள ’கில்லர் சூப்’ தொடர் பற்றி துபாளி!
நெட்ஃபிளிக்ஸின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சீரிஸான ‘கில்லர் சூப்’ க்ரைம், டார்க் காமெடி, விறுவிறுப்பான திரைக்கதை ஆகியவற்றுக்காக அதன் தனித்த வெற்றியைத் தக்க வைத்துள்ளது. இதன் திரைக்கதை மட்டுமல்லாது, இதில் நடித்துள்ள நடிகர்களின் திறமையான நடிப்பும் பார்வையாளர்களைக் கவர்ந்துள்ளது.

திரையுலகம் சில சமயங்களில் இயக்குநர்களால் இயக்கப்படும் ஒரு கட்டுப்படுத்தப்பட்ட ஒன்றாக தோன்றலாம். ஆனால், அதிலிருந்து தனித்துவமான ஒரு இயக்குநராக அபிஷேக் செளபே இருக்கிறார். அதிக ஆர்ப்பாட்டமில்லாமல் தெளிவான பார்வையோடு தன் கதையையும் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் அவர் அணுகியிருப்பது ‘கில்லர் சூப்’ தொடரில் தெளிவாகத் தெரிகிறது. இதுகுறித்து நடிகர் அன்புதாசன் கூறும்போது, “மற்ற இயக்குநர்களுடன் ஒப்பிடும்போது, அபிஷேக் எப்போதும் அமைதியாகவும் தனது வேலையில் தெளிவாகவும் உறுதியாகவும் இருந்தார். இவரது இந்த தனித்துவமான பண்பு படப்பிடிப்பில் அனைவரையும் ஒத்துழைப்புடனும் ஒவ்வொருவரின் தனித்திறனை வளர்த்தெடுக்கவும் உதவியது” என்றார்.
’கில்லர் சூப்’ தொடர் குறித்தான மறக்கமுடியாத நினைவுகளாக அவர் பகிர்ந்து கொண்டதாவது, “எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. கேரளாவில் ஒரு மழை நாள். அங்கு மழையால் நிலைமை தீவிரமாக இருந்தது. ஆனால், அதையெல்லாம் பொருட்படுத்தாது அபிஷேக் நிலைமையை அமைதியாக கையாண்டார். ‘கில்லர் சூப்’ தொடருக்குப் பிறகு நான் இயக்குநரானால் அபிஷேக் போல மிகவும் கூலாக சூழ்நிலையைக் கையாள வேண்டும் என முடிவு செய்துள்ளேன்” என்றார். இயக்குநர் அபிஷேக் செளபேயின் இந்த பண்பு இளம் தலைமுறையையும் ஊக்குவித்து அவர்கள் விரும்பும் கலையை அமைதியுடனும் பொறுமையுடனும் காதலுடனும் அணுக கற்றுக் கொடுத்திருக்கிறது.