லயோலா கல்லூரியில் நடைபெற்ற புதிய பட்டயப் படிப்பு துவக்க விழா!
சென்னை லயோலா கல்லூரியில் உள்ள விஷுவல் கம்யூனிகேஷன் மற்றும் பி.எம்.எம் துறைகள் இணைந்து, இன்று ஆகஸ்ட் 12, 2024 திங்கட்கிழமை காலை 10 மணி முதல் 11 மணி வரை விஸ்காம் பிரிவியூ தியேட்டரில் “டிப்ளமோ இன் ஃபிலிம் மேக்கிங் (AI) பிரான்ஸ்” என்ற பிரீமியம் படிப்பை தொடங்குவதைப் பெருமையுடன் அறிவித்தது.
இந்த தனித்துவமான பாடத்திட்டம் கலர் கார்பென்டர் எனும் நிறுவனத்தின் இயக்குனர்கள் லயோலா விஸ்காம் முன்னாள் மாணவர்களான திருமதி.மாதவி இளங்கோவன் மற்றும் திரு.ஜான் விஜய் ஜெபராஜ் ஆகிய இருவரால் வழிநடத்தப்படவிருக்கிறது. படைப்புத் துறையில் 20 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவத்துடன் இவர்கள் களம் இறங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. லயோலா கல்லூரியின் நூற்றாண்டு விழாவில், பிரான்ஸ், பாரிஸில் உள்ள டான் பாஸ்கோ இன்டர்நேஷனல் மீடியா அகாடமியுடன் இணைந்து, பாரம்பரியம் மிக்க விஸ்காம் துறைக்காக இந்த பாடத்திட்டத்தை அவர்கள் வடிவமைத்துள்ளனர்.


ஒளிப்பதிவாளர் திரு.பி.சி.ஸ்ரீராம், திரைப்பட எடிட்டர் திரு லெனின், சமகால ஓவியர் திரு.டிராட்ஸ்கி மருது ஆகியோரால் இந்நிகழ்வு மேலும் சிறப்படைந்தது.
இந்த நிகழ்ச்சியில் லயோலா கல்லூரி நிர்வாகிகள் அருள் முனைவர் பி.ஜெயராஜ். (கல்லூரி செயலாளர்), அருள் முனைவர் ஏ.லூயிஸ் ஆரோக்கியராஜ் சே.சு. (கல்லூரி முதல்வர்) முனைவர் ஜே.ஏ.சார்லஸ் (கல்லூரி துணை முதல்வர்) முனைவர் எம்.கௌதமன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
சேசு சபை உறுப்பினர்கள், விஸ்காம் துறையின் முன்னாள் மற்றும் இந்நாள் மாணவர்கள், கல்லூரியின் கல்வி நிர்வாகிகள், பிற நிறுவனங்களின் கல்வியாளர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள், பட்டம் பெற்ற மாணவர்கள் மற்றும் நலன் விரும்பிகள் ஆகியோரும் இந்த நிகழ்வுக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.
இந்த நிகழ்ச்சியை விஸ்காம் துறைத் தலைவர் அருள்முனைவர் ஜஸ்டின் பிரபு சே.ச., மற்றும் விஸ்காம் துறை ஒருங்கிணைப்பாளர் டாக்டர் பி.பாரதி ஆகியோர் ஒருங்கிணைப்புப் பணிகளை மேற்கொண்டனர்.
நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது!