• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

நம்மாழ்வார் மற்றும் நெல் ஜெயராமன் வாழ்க்கை வரலாற்றை பாடநூலில் சேர்க்க வேண்டும் – நடிகர் சௌந்தரராஜா கோரிக்கை

by Tamil2daynews
April 11, 2025
in சினிமா செய்திகள்
0
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

நம்மாழ்வார் மற்றும் நெல் ஜெயராமன் வாழ்க்கை வரலாற்றை பாடநூலில் சேர்க்க  வேண்டும் – நடிகர் சௌந்தரராஜா கோரிக்கை

 

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி முருகன் கோவில் முன்பு நடிகரும், தவெக தலைவர் விஜய் -யின் ஆதரவாளரான சௌந்தரராஜாவின் மண்ணுக்கும் மக்களுக்கும் அறக்கட்டளை சார்பில் நம்மாழ்வாரின் 87வது பிறந்த நாளை முன்னிட்டு இயற்கை விவசாயிகள் 11 பேருக்கு நம்மாழ்வார் விருதும், 5 ஆயிரம் ரூபாய் ரொக்கமும் வழங்கி ஊக்கபடுத்தினார்.,

முன்னதாக உசிலம்பட்டி கண்மாய் கரையில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு, தான் விதைத்த பனைவிதைகளில் எத்தனை பனை மரங்களாக வளர்ந்துள்ளன என மீட்டெடுக்கும் பணிகளிலும் ஈடுபட்டனர்.,

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த நடிகர் சௌந்தரராஜா.,

நம்மாழ்வார் பிறந்த நாளை முன்னிட்டு உசிலம்பட்டி பகுதியில் உள்ள 11 விவசாயிகளை முதற்கட்டமாக கண்டுபிடித்து விருதும், ரொக்க பணமும் எனது மண்ணுக்கும் மக்களுக்கும் அறக்கட்டளை மூலம் கொடுத்து எனது நன்றியை தெரிவித்துள்ளேன். அதை நான் பிறந்த பிறப்பிற்கு கிடைத்த மிக பெரிய அர்த்தமாக உணர்கிறேன்.,

இந்த நிகழ்வுக்கு நம்மாழ்வாரின் நண்பர், நெல் ஜெயராமனின் உறவினரும் கலந்து கொண்டனர்.,

தமிழக அரசுக்கு கோரிக்கையாக தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன், நம்மாழ்வார் ஐயாவிற்கு மணிமண்டபமும், நம்மாழ்வார் மற்றும் நெல் ஜெயராமனின் வாழ்க்கை வரலாற்றை தமிழக பாடநூலில், ஏதாவது ஒரு பக்கத்தில் வர வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.,

இனிமேல் பருவநிலை மாற்றம் மிக பெரிய சவாலாக இருக்க போகிறது, ஆரோக்கியம் ரொம்ப முக்கியம், எவ்வளவு தான் விஞ்ஞானம் வளர்ந்தாலும் விவசாயி சேற்றில் கால் வைத்தால் தான் நாம் சோற்றில் கை வைக்க முடியும்.,

மீண்டும் மீண்டும் விவசாயிகளை காக்க வேண்டியது, இயற்கை விவசாயத்தை மீட்டெடுப்பது நமது கடமை.,

இந்த மாதிரி நேர்மையான விவசாயிகளுக்கு அவர்களை போற்ற வேண்டியதும் நமது கடமை தான்., அதை எல்லா மக்களும் செய்ய வேண்டும் அரசாங்கமும் செய்ய வேண்டும்.,

மரங்களை நட்டு வைப்பதை விட அதை பராமரிப்பு கண்டிப்பாக செய்ய வேண்டும்., நிறைய மரங்களை நட வேண்டும், நீர் நிலைகளை பாதுகாக்க வேண்டும் என்பது தான் என் தலையில் ஓடிக் கொண்டிருக்கிறது.,

11 விவசாயிகளுக்கு கொடுத்துள்ளேன், இதை வருடம் முழுவதும் கொடுக்க ஆசைப்படுகிறேன்., 55 ஆயிரம் கொடுக்கவே 15 ஆண்டுகள் ஆகிவிட்டது., பணம் மட்டும் இல்லை அவர்களை தேடி கண்டறிய வேண்டும், இதை தொடர்ந்து ஒவ்வொரு மாவட்டத்திலும் சென்று விவசாயிகளுக்கு ரொக்கம் மற்றும் விருது வழங்க உள்ளேன்.,

கண்டிப்பாக பாடநூலிலும், மணிமண்டபமும் அமைக்க வேண்டும் நம்மாழ்வாரும், நெல் ஜெயராமனையும் வரும் சந்ததியினர் படித்தால் தான் விவசாயத்தில் என்ன செய்ய வேண்டும் என தெரியும்.,

இப்போது உள்ள இளைய தலைமுறை விவசாயிகள் என்ன விவசாயத்தை எப்படி செய்ய வேண்டும் என்பதை கூட மறந்துவிடும் நிலை உள்ளது., விவசாயத்தை சொல்லிக் கொடுக்க மணிமண்டபம் மட்டுமல்ல எல்லா பாட புத்தகத்திலும் வர வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்’ என்றார்.
Previous Post

சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர் பி சௌத்திரி வெளியிட்ட “அகமொழி விழிகள்” ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் !!

Next Post

‘ஐகான் ஸ்டார்’அல்லு அர்ஜுன் – இயக்குநர் அட்லி – சன் பிக்சர்ஸ் – கூட்டணியில் உருவாகும் பான் வேர்ல்ட் சினிமா

Next Post

'ஐகான் ஸ்டார்'அல்லு அர்ஜுன் - இயக்குநர் அட்லி - சன் பிக்சர்ஸ் - கூட்டணியில் உருவாகும் பான் வேர்ல்ட் சினிமா

Popular News

  • பெண்களின் பாதுகாப்பிற்காக “எதற்கும் துணிந்தவன்”  விமர்சனம்

    ரீ-என்ட்ரி கொடுக்கும் காம்னா ஜெத்மலானி

    0 shares
    Share 0 Tweet 0
  • உழவர்களுக்கு பெருமை சேர்த்த நடிகர் கார்த்தி..!

    0 shares
    Share 0 Tweet 0
  • தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் மற்றும் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையின் முன்னாள் தலைவரும் பட அதிபருமான கே ஆர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘இன்ஸ்பெக்டர் ரிஷி’ திகில் டிராமாவின் வெற்றியை ரசிகர்களுடன் படக்குழுவினர் கொண்டாடுகிறார்கள்; மெரினா கடற்கரையில் ரசிகர்களை சந்திக்கிறார்கள்; இதன் தனித்துவமான சிலந்தி வலை விளம்பர போர்டுகள் சென்னை நகரத்தை அலங்கரிக்கின்றன.

    0 shares
    Share 0 Tweet 0
  • அண்ணாசாலையில் கரை வேட்டியுடன் பைக்கில் வலம் வந்த அமைச்சர்!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

நடிகர் சந்தீப் கிஷன் நடிக்கும் ‘பவர் பேட்டா’ (Power Peta) படத்தின் டைட்டில் வெளியீடு

April 16, 2026

‘லைட் வெயிட் பேபி’ படத்தின் மூலம் கதையின் நாயகனாக அறிமுகமாகும் நடிகர் விக்கல்ஸ் விக்ரம்

April 16, 2026

இயக்குநர் வெற்றிமாறன் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வெளியிட்ட, கோபி நயினாரின் “காலனி” பட ஃபர்ஸ்ட் லுக் !!

April 16, 2026

இயக்குநர் வெங்கட் பிரபு வெளியிட்ட “லெனின் பாண்டியன்” டிரெய்லர் !!

April 16, 2026

லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ (LIK) திரைப்பட நன்றி விழா!

April 16, 2026

குற்றம் கடிதலைத் தொடர்ந்து மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வரவிருக்கும் ‘குற்றம் கடிதல் 2!

April 16, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.