• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

அட்ரஸை தொலைத்த மக்களின் வலியை பாடலாக்கிய சினேகன்;; பாடலை வெளியிடுகிறார் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான்

by Tamil2daynews
July 25, 2025
in சினிமா செய்திகள்
0
0
SHARES
8
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

அட்ரஸை தொலைத்த மக்களின் வலியை பாடலாக்கிய சினேகன்;; பாடலை வெளியிடுகிறார் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான்

 

காக்டைல் சினிமா சார்பில் அஜய் கிருஷ்ணா தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘அட்ரஸ்’. ‘குங்குமப்பூவும் கொஞ்சும் புறாவும்’, ‘வானவராயன் வல்லவராயன்’ ஆகிய படங்களை இயக்கிய இராஜமோகன் இந்த படத்தை இயக்குகிறார். கேரளாவை சேர்ந்த தியா, குஜராத்தை சேர்ந்த பூஜா ஜவேரி என இரண்டு கதாநாயகிகள் இதில் அறிமுகமாகின்றனர். தம்பி ராமையா, இசக்கி பரத், தேவதர்ஷினி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இளம் முன்னணி ஹீரோ ஒருவர் முக்கிய வேடத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.

‘மூக்குத்தி அம்மன்’, ‘நெற்றிக்கண்’ உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்த கிரிஷ் கோபாலகிருஷ்ணன் (கிரிஷ்.G) இசையமைத்துள்ளார். கிருஷ்ணகுமார்-வாசன் இருவரும் ஒளிப்பதிவை கவனிக்க, தமிழரசன் படத்தொகுப்பை மேற்கொண்டுள்ளார். சினேகன், மோகன் ராஜன், ‘கானா’ ஹரி ஆகியோர் பாடல்களை எழுதி உள்ளனர்

படம் பற்றிய இயக்குநர் இராஜமோகன் கூறும்போது, “1956ல் மொழிவாரி மாகாணங்கள் பிரிக்கப்பட்டன. அந்த சமயத்தில் தமிழ்நாட்டிற்கும் சேராமல் கேரளாவிற்கும் சேராமல் நடுவில் ஒரு சில கிராமங்கள் மாட்டிக் கொண்டன. எந்த மாநிலத்திலும் சேராமல் அடிப்படை உரிமையான ரேஷன் கார்டு, வாக்காளர அட்டை, ஆதர்ர் கார்டு கூட கிடைக்காமல் அந்த மக்கள் இரு மாநில அரசாலும் புறக்கணிக்கப்பட்டு ஒரு கடினமான வாழ்க்கையை 2016 வரை வாழ்ந்தனர்,

அங்குள்ள மக்களுக்கு வாக்குரிமை அளித்து அவற்றை தங்களது சுயலாபத்துக்காக பயன்படுத்திக் கொள்ளக் கூட, இரண்டு மாநில அரசுகள் தரப்பில் நடவடிக்கைகள் எடுக்கப்படாததின் பின்னணியில் கூட ஒரு அரசியல் இருக்கிறது. அப்படிப்பட்ட பிரச்சனைகளை சந்தித்த ஒரு ஊரின் அழகியலையும் அந்த மக்களின் வலியையும் ஒரு பாடலில் அழகாக வெளிப்படுத்தியுள்ளோம்” என்று கூறுகிறார்.

*“மேகம் மூடிக் கொள்ளும்.. வானம் தேடிச்செல்லும்.. பூமி தலையில் தாங்கும் எங்க ஊருடா…* ” என துவங்கும் இந்தப் பாடலில்

*“எல்லைக்கோட்டை எவன்டா போட்டான்.. கோட்டை தாண்டி எவனும் வரலை..*

*நூறு சட்டம் நூறு திட்டம்.. எதுவும் இங்கே எட்டவில்லை..*

*யுத்தங்கள் இல்லை. ரத்தமும் இல்லை.. ஆனாலும் அகதியாக வாழ்கிறோம்..*

*நாங்கள் நாடோடி இல்ல.. ஓடோடி செல்ல.. நெஞ்சு பொறுக்குதில்ல..”*

என்பது போன்று அந்த மக்களின் வேதனையை வெளிப்படுத்தும் வரிகள் அமைந்திருக்கின்றன”

இந்தப் பாடலை நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் கேட்டுவிட்டு, “இந்தப் பாடலில் சொல்லப்பட்டுள்ள கருத்து நிச்சயமாக சமூகத்திற்கு, மக்களுக்கு சென்று சேர வேண்டும்” என்று பாராட்டியதுடன் இன்று (ஜூலை 23) இந்த பாடலை வெளியிடுகிறார்.

எல்லா வளங்களும் இருந்தும் எதுவும் இல்லை என்கிற அந்த மக்களின் மனக்குறையை வெளிப்படுத்தும் இந்த பாடலை கவிஞர் சினேகன் எழுதியுள்ளார். செந்தில் கணேஷ், கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இருவரும் இணைந்து பாடியுள்ளனர்.
Previous Post

சூர்யாவின் மாஸ் திருவிழா ‘கருப்பு’ பட டீசர் வெளியானது !

Next Post

ஜி.வி.பிரகாஷுடன் இணைந்து அதிரடி கம்பேக் கொடுக்கிறார் அபாஸ்;

Next Post

ஜி.வி.பிரகாஷுடன் இணைந்து அதிரடி கம்பேக் கொடுக்கிறார் அபாஸ்;

Popular News

  • டியூப் லைட் புரொடக்ஷன்ஸ் வழங்கும், இயக்குநர் எம்.ஆர். பாரதி இயக்கத்தில், நவாஸ் மற்றும் ஷெர்ரி அகர்வால் நடிப்பில் காதல், ஏக்கம் மற்றும் இசையின் மாயாஜாலத்தைக் கொண்டாடும் மியூசிக்கல் ரொமான்ஸ் திரைப்படம்’சைக்கிள் கேப்’!

    0 shares
    Share 0 Tweet 0
  • 29 – விமர்சனம் ரேட்டிங் -3.5 / 5

    0 shares
    Share 0 Tweet 0
  • ப்ரைம் வீடியோ தனது புதிய ப்ரைம் ஒரிஜினல் திரைப்படமான “சிஸ்டம்” திரைப்படத்தின் உலகளாவிய வெளியீட்டு தேதியை மே 22 என அறிவித்துள்ளது.

    0 shares
    Share 0 Tweet 0
  • நடிகை பாக்யஸ்ரீ போர்ஸின் பிறந்தநாள் எனும் இந்தச் சிறப்புமிக்க நன்னாளில் அவர் ‘சேயோன்’ திரைப்படத்தில் அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளார் என்பதை ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் டர்மெரிக் மீடியா நிறுவனங்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் அறிவிக்கின்றன.

    0 shares
    Share 0 Tweet 0
  • “பெத்தி” படம் முடிந்து வெளியே வரும் போது கண்களில் கண்ணீர் இருக்கும்” – தயாரிப்பு வடிவமைப்பாளர் அவினாஷ் கொல்லா

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

“பெத்தி” படம் முடிந்து வெளியே வரும் போது கண்களில் கண்ணீர் இருக்கும்” – தயாரிப்பு வடிவமைப்பாளர் அவினாஷ் கொல்லா

May 8, 2026

துல்கர் சல்மானின் ஸ்டைலீஷ் படம் “ஐ அம் கேம்” வரும் ஆகஸ்ட் 2026 வெளியாகிறது ! !

May 8, 2026

டியூப் லைட் புரொடக்ஷன்ஸ் வழங்கும், இயக்குநர் எம்.ஆர். பாரதி இயக்கத்தில், நவாஸ் மற்றும் ஷெர்ரி அகர்வால் நடிப்பில் காதல், ஏக்கம் மற்றும் இசையின் மாயாஜாலத்தைக் கொண்டாடும் மியூசிக்கல் ரொமான்ஸ் திரைப்படம்’சைக்கிள் கேப்’!

May 8, 2026

சந்தீப் கிஷன் – கிருஷ்ண சைதன்யா – விஜய் சில்லா – சசி தேவி ரெட்டி கூட்டணியில் உருவாகும் ‘பவர் பேட்டா’ (Power Peta) படத்தின் அதிரடி கிளிம்ப்ஸ் வீடியோ வெளியானது !!

May 8, 2026

29 – விமர்சனம் ரேட்டிங் -3.5 / 5

May 8, 2026

மெகா பவர் ஸ்டார் ராம் சரண், புச்சி பாபு சனா, வெங்கட சதீஷ் கிலாரு, விருத்தி சினிமாஸ் மைத்ரி மூவி மேக்கர்ஸ் சுகுமார் ரைட்டிங்ஸ் இணையும் “பெத்தி” படப்பிடிப்பு நிறைவு; ஜூன் 4 உலகமெங்கும் வெளியாகிறது !

May 6, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.