காந்தி டாக்ஸ் – விமர்சனம்
பணத்தின் மீதான பேராசை மற்றும் ஊழலை மையமாகக் கொண்ட இப்படம், ஏ.ஆர். ரஹ்மானின் பின்னணி இசை மற்றும் நடிகர்களின் நேர்த்தியான நடிப்பு மூலம் மௌனத்தை ஒரு மொழியாக மாற்றுகிறது.
விஜய் சேதுபதி மற்றும் அரவிந்த் சாமி இருவரும் வசனங்கள் இல்லாமல் வெறும் செய்கைகள் மற்றும் உணர்வுகள் மூலம் சிறப்பாக நடித்துள்ளனர். குறிப்பாக, விஜய் சேதுபதியின் நடிப்பு பாராட்டுக்களைப் பெற்றுள்ளது.
விஜய் சேதுபதியின் எதிர் வீட்டு காதல் அதிதி ராவ்,அடடா என்னா நடிப்பு இருவருக்கும் சேர்ந்து விட வேண்டும் என்று படம் பார்க்கும் ஆடியன்ஸ் துடிப்பது நிஜம். அதிதி ராவ் இறுதியாக விஜய் சேதுபதிக்கு அறிவுரை சொல்லும் அந்த காட்சி அபாரம்.
திருந்திய விஜய் சேதுபதி துப்புரவு தொழிலாளியாக தான் வேலை செய்ய வேண்டுமா என்று யோசிக்கும் பொழுது சற்று நெருடலாக இருக்கின்றது.
விஜய் சேதுபதியின் அம்மாவாக நடித்த நடிகை நடிப்பில் பட்டையை கிளப்புகிறார்.அரவிந்த்சாமி வீட்டில் விஜய் சேதுபதி திருட செல்லும் பொழுது இன்னொரு திருடன் வருவது சைலன்ட் கில்லர்.
வசனங்கள் இல்லாததால், ரஹ்மானின் பின்னணி இசைதான் படத்தின் ஆன்மாவாகச் செயல்படுகிறது. இது காட்சிகளுக்கு உயிரூட்டுவதாகவும், உணர்ச்சிகளைக் கடத்துவதாகவும் இருக்கின்றது.
கிஷோர் பாண்டுரங் பெலேகர் ஒரு சவாலான கதையை எடுத்து, காட்சிகளாலேயே கதையை நேர்த்தியாகக் கடத்தியுள்ளார்.
வித்தியாசமான முயற்சி, ரஹ்மானின் இசை, மற்றும் நடிகர்களின் அர்ப்பணிப்புள்ள நடிப்பு ஆகியவை படத்திற்குப் பெரிய பலமாகப் பார்க்கப்படுகின்றன.படத்தின் இறுதிப் பகுதி சென்டிமென்ட் மெலோடிரமாவாக மாறுவதை ஒரு குறையாகச் சுட்டிக்காட்டுகின்றனர்.மொத்தத்தில், ‘காந்தி டாக்ஸ்’ திரைப்படம், வழக்கமான சத்தமான திரைப்படங்களுக்கு மத்தியில், மௌனம் எவ்வளவு சக்தி வாய்ந்தது என்பதை உணர்த்தும் ஒரு மாறுபட்ட சினிமா அனுபவமாக உள்ளது.
மொத்தத்தில் இந்த ‘காந்தி டாக்ஸ்’ திரையில் ஒரு மௌன புரட்சி.








