அசரடிக்கும் பிரம்மாண்ட காட்சிகள், த்ரில்லிங்கான புதிய கதாபாத்திரங்கள் என இயக்குநர் ஜேம்ஸ் கேமரூனின் பிரம்மாண்டமான ‘அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்’ திரைப்படம் டிசம்பர் 19 ஆம் தேதி வெளியாவதை முன்னிட்டு தொடங்கி இருக்கும் கவுண்டவுன் ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது!
இந்த ஆண்டின் மிக பிரம்மாண்டமான சினிமா அனுபவத்தைக் தர இருக்கும் ‘அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்’ திரைப்படம் பார்ப்பதற்காக 1.2 மில்லியனுக்கும் அதிகமான இந்தியர்கள் புக் மை ஷோ செயலியில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்தியாவில் டிசம்பர் 5 ஆம் தேதி முதல் ஐமேக்ஸ் மற்றும் பிற திரையரங்குகளுக்கான முன்பதிவுகள் தொடங்கும் என்று அறிவித்த பிறகு, ‘அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்’ திரைப்படத்திற்கு உலகளவில் எதிர்பார்ப்பு இன்னும் அதிகரித்துள்ளது.
ஜேம்ஸ் கேமரூனின் மறக்க முடியாத அடுத்த அத்தியாயத்தை இந்த டிசம்பரில் உலகெங்கிலும் உள்ள பார்வையாளர்கள் தங்கள் குடும்பங்களுடன் காண்பதற்கான கவுண்டவுன் தொடங்குகிறது.
20த் செஞ்சுரி ஸ்டுடியோஸ் டிசம்பர் 19 ஆம் தேதி திரையரங்குகளில் ‘அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்’ திரைப்படத்தை ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய ஆறு மொழிகளில் வெளியிடுகிறது.









