தண்டட்டி – விமர்சனம்
தேனி மாவட்டம் கிடாரிப்பட்டி பகுதியில் வசித்து வரும் 57 வயதான தங்கப் பொண்ணு என்னும் மூதாட்டி காணாமல் போகிறார். அவரைத் தேடும் புள்ளியில் தொடங்கும் கதை, அவரது இறப்பிற்குப் பின்னர் காணாமல் போகும் அவரது தண்டட்டியைத் தேடிக் கண்டடையும் புள்ளியில் நிறைவு பெறுகிறது. தங்கப் பொண்ணு ஏன் காணாமல் போகிறார், அவர் எப்படி இறந்து போகிறார், அவரது அடையாளங்களில் ஒன்றான தண்டட்டி எப்படித் திருடு போகிறது, அதைத் திருடியவர் யார், கண்டுபிடிப்பவர் யார் என்று பயணிக்கிறது திரைக்கதை.
இந்தப் பயணத்திற்கு நடுவே அழகான வலி மிகுந்த இரண்டு குட்டி காதல் அத்தியாயங்களும் படத்தில் உண்டு. அவை தான் கதையின் மையப்பொருளான இந்த தண்டட்டி படத்திற்கு உயிர்நாடி.

கிடாரிப்பட்டி ஊர் மக்களிடம் மாட்டிக் கொண்டு அவர் முழி பிதுங்கும் காட்சிகளில் கலகலக்க வைக்கிறார். தங்கப் பொண்ணுவின் குடிகார மகன் கதாபாத்திரத்தில் விவேக் பிரசன்னா. பிரத்தியேகமான குடிகாரனின் உடல்மொழியினால் வசீகரிக்கிறார். திரும்பத் திரும்ப அவர் பேசும் சில வசனங்கள் அலுப்பூட்டினாலும் தன் அநாயாசமான நடிப்பால் அதை மறக்கடிக்கிறார். சிறுவன் முகேஷ் தங்கப் பொண்ணுவின் பேரனாக சில இடங்களில் கண்கலங்க வைக்கிறார். தீபா சங்கர், செம்மலர் அன்னம் போன்றோருக்கு பழக்கப்பட்ட பழைய கதாபாத்திரம் தான். இவர்களைத் தாண்டி நடிப்பில் கவனம் ஈர்த்தவர் அந்த “கோளாறு பாட்டி”. இவர் பசுபதியைக் கலாய்த்துக் கொண்டே அவரது ஹெட் கான்ஸ்டபிள் தொப்பியைத் தலையில் வைக்கும் அந்தக் காட்சிக்குக் கண்டிப்பாய் திரையரங்குகள் அதிரும்.
அது போல் நேட்டிவிட்டியுடன் கூடிய உடல்மொழியைத் துணை கதாபாத்திரத்திடம் கூட அச்சு அசலாக வாங்கியிருக்கும் அயராத அவரது உழைப்புக்கு ஒரு சல்யூட். படத்திற்கு மற்றொரு பெரிய ப்ளஸ் ஒளிப்பதிவாளர் மகேஷ் முத்துச்சாமியின் நேர்த்தியான ஒளிப்பதிவு. ஒவ்வொரு காட்சியுமே, கண்ணில் ஒற்றிக் கொள்ளத்தக்க தங்கத் தண்டட்டியைப் போல் மின்னுகின்றது.
இருப்பினும் படத்தில் பல காட்சிகள் விறு விறுப்பாக நகர்வது காண முடிகிறது.
படத்தொகுப்பாளர் சிவநந்தீஸ்வரன் இவரின் படத்தொகுப்பும் அருமை.

அதைக் கேட்டு கான்ஸ்டபிள் பசுபதி கண்களில் ஒரு பயம் கலந்த மிரட்டல் தெரிவது என்னவோ நிஜம்.
அதுவரை தாயின் தண்டட்டிக்காக அடித்து உருண்டு குடுமிப்பிடி சண்டை போடும் குடும்ப உறவுகள், புதிதாக ஒரு பதினைந்து இலட்சம் வந்ததும் அந்தத் தண்டட்டியை அப்படியே விட்டுவிடுவார்கள் என்பது இன்றைய எதார்த்த வாழ்க்கையில் நடக்கும் காசோ, பணமோ, நகையோ எதுவோ ஒன்று தனக்கு வேணும் என்கிற சாதாரண மனிதனின் எண்ணத்தை பிரதிபலிக்கின்றது.
எதார்த்த முகம் கொண்ட ஊர் மக்கள் கதாபாத்திரங்களும், சொத்துக்காகத் தெருக்குழாயடி சண்டை போடும் பிள்ளைகளின் கதாபாத்திரங்களும் நம்மைக் கதைக்குள் முழுமையாக இழுத்துச் செல்கின்றது.
மொத்தத்தில் பத்து நிமிடம் வரும் காதல் காட்சிகள் படத்தில் முழுவதுமாக நம் மனதை விட்டு அகலாமல் இருப்பது படத்துக்கு மிகப்பெரிய பிளஸ் பாயிண்ட் என்றுதான் சொல்ல வேண்டும்.
இன்றைக்கு நாம் நகர வாழ்க்கைக்குள் கட்டாயமாக திணிக்கப்பட்டு வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில் இந்த ‘தண்டட்டி’ குழுவினர்களுக்கு நிச்சயமாக நம் வாழ்த்து சொல்லியே ஆக வேண்டும்.
வருடத்தில் 12 மாதங்களும் ஓய்வில்லாமல் உழைத்தாலும் கோடை விடுமுறைக்கு நகரத்தை விட்டு ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு என்று சுற்றுலா செல்ல நம் மனம் எவ்வளவு ஆசைப்படுமோ அந்த அளவுக்கு இந்த படம் பார்க்க மனம் நிச்சயம் ஆசைப்படும்