காந்தி ஜெயந்தியில் திரைக்களம் காணும் சைக்காலஜி திரில்லர் படமான கிட்டி
ரியா ஸ்ரீ கிரியேசன்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் தயாரிப்பாளர் திருமாறன் தயாரித்து நெடுமாறன் மோகன்தாஸ் இயக்கத்தில் அக்டோபர் இரண்டாம் தேதி உலகெங்கும் வெளியாகும் படம் கிட்டி.
12 வருடங்களுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சி மலர் போல தமிழ் சினிமாவில் பரபரப்பான திரைக்கதை அம்சம் உள்ள திரைப்படங்கள் வருவது வெகு கடினம் ஆகிவிட்டது.

நாட்டில் நம்மை சுற்றி எவ்வளவு குற்றங்கள் நடந்தாலும் யார் செய்தார்கள் என்ற விசாரணை செய்வதுதான் ரெகுலர் ஃபார்முலா திறக்கதியாக தமிழ் சினிமாவில் உள்ளது. அதை மாற்றி கதை நாயகனை சுற்றி பின்னப்பட்டிருக்கும் இந்த திரைக்கதையால் நிச்சயம் படம் வெளியான பிறகு நிமிர்ந்து நிற்பார் இயக்குனர் நெடுமாறன் மோகன்தாஸ்.
படத்தின் கதாபாத்திரங்கள் ஒவ்வொன்றுக்கும் இயக்குனர் மிகுந்த சிரம எடுத்து ஒரு கதாபாத்திரத்தை உருவாக்கி இந்த கதாபாத்திரங்களில் இவர்கள்தான் நடிக்க வேண்டும் என்று நடிகர் தேர்வில் மிகுந்த அக்கறையுடன் செயல்பட்டிருப்பது குறிப்பிட்டதக்கது.மேலும் நாயகன் அசோக் மனநோயாளியாக நடிக்கும் அந்த கதாபாத்திரத்தை இயக்குனர் சொல்லிக் கொடுத்த விதமும் நாயகன் நடித்த விதமும் படத்தில் அருமையாக இருக்கும் என்று இயக்குனர் கூறியது மறக்க முடியாத நிகழ்வு.
நிஷா,சங்கவி,சிமு அத்வானி ஆகிய மூன்று நாயகிகள் உடன், ஊமை விழிகள் பட இயக்குனர் ஆர் அரவிந்த்ராஜ் படத்தின் முக்கிய திருப்புமுனை பாத்திரத்தில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.பிரபல நடிகர் ஒய் ஜி மகேந்திரன் சிறப்பு தோற்றத்திலும் . தயாரிப்பாளர் திருமாறன் விசாரணை அதிகாரியாக வரும் போலீஸ் கதாபாத்திரத்திலும் நடித்திருக்கிறார்கள்.
இப்படத்தின் படப்பிடிப்பு கும்பகோணம், கடலூர், தரங்கம்பாடி, சென்னை சுற்றுவட்டார பகுதிகளில் நடைபெற்று நிறைவடைந்து இருக்கிறது.
படத்தின் தொழில்நுட்பக் குழு விபரம்.
ரியா கிரியேஷன்ஸ் சார்பாக திருமாறன் படத்தை தயாரித்திருக்கிறார் .









