நடிகர் விஜய் தேவரகொண்டாவின் ஆக்ஷன் நிறைந்த ‘கிங்டம்’ திரைப்படம் உலகம் முழுவதும் ஜூலை 31 அன்று வெளியாகிறது!
கெளதம் தின்னூரி இயக்கத்தில் நடிகர்கள் விஜய் தேவரகொண்டா, சத்யதேவ், பாக்யஸ்ரீ போர்ஸ் மற்றும் பலர் நடித்திருக்கும் ‘கிங்டம்’ திரைப்படம் உலகம் முழுவதும் ஜூலை 31, 2025 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதியுடன் படக்குழு வெளியிட்டிருக்கும் வீடியோவை ரசிகர்கள் இணையத்தில் கொண்டாடி வருகின்றனர்.
ஆக்ஷன், ஹீரோயிசம், உயர்தர தொழில்நுட்ப தரத்துடன் இந்தப் படம் உருவாகி இருக்கிறது. தற்போது வெளியாகி இருக்கும் இந்த புதிய புரோமோவில் அதிரடியான ஆக்ஷன் காட்சிகள் உயர்தர தொழில்நுட்பத்தில் உருவாகி விஷூவலாக ரசிகர்களை கட்டிப் போட்டிருக்கிறது. இதற்கு முன்பு பார்த்திராத பிரம்மாண்ட திரையரங்க அனுபவத்தை இந்தப் படம் ரசிகர்களுக்குத் தர இருக்கிறது என்பதில் சந்தேகம் இல்லை. படத்தின் பிரம்மாண்டத்தையும் தரத்தையும் கூட்டுவதற்கு படக்குழு கூடுதல் நேரம் எடுத்து உழைத்துள்ளது.
படத்தின் புதிய வெளியீட்டு தேதி பற்றி படக்குழு பகிர்ந்து கொண்டதாவது, “’கிங்டம்’ படம் மட்டுமல்ல நாங்கள் மிகவும் விரும்பி உருவாக்கிய உலகம். ஒவ்வொரு ஃபிரேமும் ரசிகர்களுக்கு மறக்க முடியாததாக இருக்க வேண்டும் என்று உருவாக்கியுள்ளோம். சினிமா உலகில் மறக்க முடியாத நாளாக ஜூலை 31 இருக்கும். தற்போது வெளியாகியுள்ள புரோமோ சமூகவலைதளங்களில் டிரெண்டிங்கில் உள்ளது. முன்னணி கதாபாத்திரங்களின் கிளிம்ப்ஸ் பிரம்மாண்டமாக உள்ளதாகவும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்”.
ஜுலை 31, 2025 அன்று ‘கிங்டம்’ படத்தை திரையரங்குகளில் காணத் தயாராகுங்கள்!
தொழில்நுட்பக் குழு:
தயாரிப்பாளர்: எஸ் நாக வம்சி மற்றும் சாய் செளஜன்யா,
தயாரிப்பு நிறுவனம்: சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் மற்றும் ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ்,
வழங்குபவர்: ஸ்ரீகரா ஸ்டுடியோஸ்,
இசையமைப்பாளர்: அனிருத் ரவிச்சந்தர்,
எடிட்டிங்: தேசிய விருது வென்ற நவீன் நூலி,
ஒளிப்பதிவு: ஜோமன் டி ஜான் மற்றும் கிரீஷ் கங்காதரன்









