காக்கா, கழுகு கதைக்கு முற்றுபுள்ளி வைத்தார் நடிகர் ரஜினி
லைக்கா ப்ரொடக்ஷன் தயாரிப்பில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கும் படம் லால் சலாம்.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா 27 1 2024 அன்று சென்னை சாய்ராம் கல்லூரியில் மிக பிரமாண்டமான முறையில் நடைபெற்றது இதில் இறுதியாக பேசவந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்ன பேசினார் என்று பார்ப்போம்.

நடிகர் விஜய் எனக்கு முன்னாள் வளர்ந்த பையன், நடிகர் விஜயை சின்ன வயதிலிருந்தே பார்த்து வருகிறேன். தர்மத்தின் தலைவன் படப்பிடிப்பின் போது விஜயின் தந்தை என்னிடம் வந்து, என்னுடைய பையன் படித்து வருகிறான், அவனுக்கு நடிப்பின் மீது ஆர்வம் அதிகமாக உள்ளது. நீங்கள் கூறுங்கள் அவன் படித்துவிட்டு வந்தவுடன் நடிக்க வேண்டுமென தெரிவித்தார். அதன் பிறகு விஜய் விஜய் நடிப்பிற்கு வந்து உழைப்பால் உயர்ந்து உள்ளார். தற்போது நன்றாக நடித்து வருகிறார். தற்போது அரசியலுக்கு வரும் முயற்சியில் உள்ளார். அவருக்கு என்னுடைய வாழ்த்துக்கள், தற்போது விஜய்க்கும் எனக்கும் போட்டி என கூறுவது மிகவும் கவலை அளிக்கிறது.

அவரும் மேடையில் எனக்கு போட்டி நான் தான் என கூறியுள்ளார். நடிகர் விஜய் எனக்கு போட்டியான நினைத்தால் அது எனக்கு மரியாதை இல்லை, நானும் விஜய்க்கு போட்டியா நினைத்தால் அவருக்கும் மரியாதை இல்லை, தயவுசெய்து என்னுடைய மற்றும் அவருடைய ரசிகர்கள் காக்கா கழுகு கதையை ரசிகர்கள் இத்துடன் நிறுத்திக் கொள்ள வேண்டும் பேசினார்.
மேலும் இது விஷயமாக ரஜினிகாந்த் மேடையில் பேசிய பொழுது ரசிகர்களின் கரகோஷம் காதை பிளந்தது.