‘பிளாக்’ – விமர்சனம்
வாங்கியிருக்கும் கடற்கரை வில்லாவுக்கு விடுமுறைக்காகச் செல்கிறார். ஆட்கள் யாருமற்ற, தொடர் வீடுகளைக் கொண்ட அந்த வில்லாவில், சில அமானுஷ்ய விஷயங்கள் அடுக்கடுக்காக நடக்கின்றன.
1964-ம் ஆண்டு ஆரம்பிக்கும் கதை, நிகழ்காலத்தில் முன், பின் என காட்சிகள் செல்வது எதிர்பார்ப்பை ஏற்படுத்துகின்றன. யாருமில்லாத வீட்டுக்கு ஓவியம் பரிசாக வந்திருப்பது, எதிர் வீட்டில் திடீரென தங்களைப் போலவே ஒரு ஜோடி இருப்பது, இரண்டு வசந்தும் நேருக்கு நேராக மோதிக்கொள்வது, ‘பிளாக்’ பகுதியை இருவரும் கடக்கும் போது நடக்கும் காலமாற்றம் என பரபரப் புடன் இருக்கை நுனிக்கு அழைத்துச் செல்கிறது, பாலசுப்ரமணியின் இயக்கமும் திரைக்கதையும்.
கோபக்காரனாகவும் அமானுஷ்யம் கண்டு அதிர்ச்சியடையும் போதும் நடந்ததை போலீஸிடம் விளக்க முடியாமல் தவிக்கும்போதும் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார், ஜீவா. பயத்தில் தடுமாறுவது, சொன்ன பேச்சைக் கேட்காத ஜீவா மீது வரும் கோபம் என கதாபாத்தி ரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார் பிரியா பவானி சங்கர். போலீஸாக வரும் யோக் ஜேபி, இரண்டு மூன்று காட்சிகளில் மட்டுமே வரும் விவேக் பிரசன்னா ஆகியோரும் கவனிக்க வைக்கிறார்கள்.
பின்னணி இசையில் த்ரில்லருக்கான எபெக்ட்டை கொடுக்கக் கடுமையாக உழைத்திருக்கிறார் சாம்.சி.எஸ். பாடல் காட்சிகள் தேவையற்றத் திணிப்பு. கோகுல் பினோயின் ஒளிப்பதிவு, இரவு நேர திகிலை இயல் பாகவே தந்துவிடுகிறது. இரண்டு கேரக்டர்தான் மொத்த படமும் என்பதால், அதை சுவாரஸியமாகக் கொடுக்க முயன்றிருக்கிறது பிலோமின் ராஜின் படத்தொகுப்பு.









