“ஹேப்பி ராஜ்” படத்தின் முதல் சிங்கிள் “ஆடினே இருப்பேன்” வெளியீடு – இளமையான மற்றும் உற்சாகத்தின் வண்ணமயமான கொண்டாட்டம்!
Happy Raj திரைப்படத்தின் தயாரிப்பாளர்கள், படத்தின் முதல் சிங்கிளான “ஆடினே இருப்பேன்” பாடலை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளனர். இளைஞர்களின் கொண்டாட்ட உணர்வை முழுமையாகப் பிரதிபலிக்கும் இந்த உற்சாகமான மற்றும் ஆற்றல் மிகுந்த நடனப் பாடல், படத்தின் மகிழ்ச்சியான தருணத்தை சிறப்பாக வெளிப்படுத்துகிறது. படத்தின் புரோமோவுக்கு கிடைத்த மிகப்பெரிய வரவேற்பையும், படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்ததையும் தொடர்ந்து, இளைஞர்களின் நடன கீதமாக மாறவுள்ள ஒரு பாடலை இப்போது ரசிகர்களிடம் கொண்டு வந்துள்ளது படக்குழு.
G. V. பிரகாஷ் குமார் மற்றும் ஸ்ரீ கௌரி பிரியா ஆகியோர் புதுமையான மற்றும் ஸ்டைலிஷ் தோற்றத்தில் “ஆடினே இருப்பேன்” பாடலில் நடனமாடி உள்ளனர். உயிரோட்டமிக்க மற்றும் சுறுசுறுப்பான சூழலில் இவர்களின் நடன அசைவுகளை பார்க்கும் பொழுது அவர்களுக்குள்ளான கெமிஸ்ட்ரி, ஆற்றல்மிகு நடிப்பு மற்றும் அன்னிச்சையான நடன அசைவுகள் பாடலுக்கு தனித்துவமான கவர்ச்சியை அளிக்கின்றன.
பெங்களூரு நகரின் பரபரப்பான வீதிகளில் படமாக்கப்பட்ட இந்தப் பாடல், நகரத்தின் நவீன நகர வாழ்க்கையின் துடிப்பை காட்சிப்படுத்துகிறது. வண்ணமயமான தெருகளின் அழகியல், சமகால காட்சித்தொகுப்பு மற்றும் மனம் மகிழ்வான காட்சிகளுடன், கதாநாயகர்கள் நகரைச் சுற்றி உல்லாசமாகச் செல்லும் போதும் உற்சாகமான நடனத்தில் ஈடுபடும் தருணங்களும் பாடலுக்கு தனித்துவமான மற்றும் பண்டிகைக்கால கொண்டாட்ட மனநிலையை கொடுக்கின்றன.

மேலும் ஒரு முக்கியமான நிகழ்வாக, இந்தப் பாடலின் மூலம் மணிசந்திரா முதன்மை நடன இயக்குநராக அறிமுகமாகிறார். முன்னணி நடன இயக்குநர்களிடம் உதவியாளராக பணியாற்றிய அனுபவத்துடன், அவர் தனது தனித்துவமான உற்சாகமான மற்றும் ஸ்டைலிஷ் அணுகுமுறையை இப்பாடலில் வெளிப்படுத்தியுள்ளார். “ஆடினே இருப்பேன்” பாடலில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ‘சிக்னேச்சர் ஹுக் ஸ்டெப்’ ஏற்கனவே இளைஞர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இசையின் தாளத்துடன் இயைந்த அவரது நடன வடிவமைப்பு, கதாநாயகர்களின் ஆற்றல்மிகு நடிப்பை ஒரு படி மேலும் உயர்த்துகிறது.
ஜெயவரதன் தயாரிப்பில், Beyond Pictures நிறுவனத்தின் முதல் தயாரிப்பாக “ஹேப்பி ராஜ்” உருவாகியுள்ளது. மரியா இளஞ்செழியன் இயக்கத்தில் உருவாகயிருக்கும் இந்தத் திரைப்படம் நம்பிக்கை மற்றும் இலகுவான உணர்வுகளை மையமாகக் கொண்ட முழுமையான ஃபீல்-குட் என்டர்டெய்னராக வடிவமைக்கப்பட்டுள்ளது.
G. V. பிரகாஷ் குமார் ‘ஹேப்பி ராஜ்’ என்ற படத்தின் தலைப்பிறகு ஏற்றபடி கதாபாத்திரத்தில் புதுமையும் கவர்ச்சியும் கொண்ட நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் ; கதாநாயகியாக ஸ்ரீ கௌரி பிரியா உணர்ச்சி ஆழமும் இரக்கமும் கொண்டவராக நடித்திருக்கிறார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு அப்பாஸ் தமிழ் திரையுலகிற்கு திரும்புவது இப்படத்தின் முக்கிய அம்சமாகும்; இது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
படத்தில் ஜார்ஜ் மரியான், பிரார்த்தனா, அதிர்ச்சி அருண், மதுரை முத்து, Sofa Boy ரசூல் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஒளிப்பதிவாளர் மதன் கிறிஸ்டோபர், எடிட்டர் RK செல்வா, கலை இயக்குநர் குமார் கங்காப்பா, ஆடை வடிவமைப்பாளர் பிரவீன் ராஜா ஆகியோர் தொழில்நுட்பக் குழுவில் இணைந்துள்ளனர். இணைத் தயாரிப்பாளராக ஜெயகாந்த் சுரேஷ் செயல்படுகிறார்; மக்கள் தொடர்பு பணிகளை ரேகா PRO மேற்கொள்கிறார்.









