“காத்து வாக்குல ரெண்டு காதல்” விமர்சனம்.
தமிழ் சினிமாவுல கதைக்கு பெரும் பஞ்சம் என்று பல பேர் சொல்லி கேட்டு இருக்கோம் ஆனா இந்த காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தை பார்த்ததுக்கு அப்புறம்தான் அது நமக்கு உண்மை புரிஞ்சது.
ஒரே நேரத்தில் இரண்டு பெண்களை காதலிப்பது ஒன்றும் தமிழ் சினிமாவில் புதிது அல்ல. ரஜினிகாந்த், மோகன் என்று பலர் நடித்திருக்கிறார்கள். காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் அதே கதையை காமெடி, எமோஷன் கலந்து தன் ஸ்டைலில் கொடுத்திருக்கிறார் விக்னேஷ் சிவன்.
ஆனால் படம் முழுக்க ரசிக்கும்படி இல்லை. ஆங்காங்கே மட்டுமே ரசிக்கும்படி இருக்கிறது. அடுத்த என்ன நடக்கும் என்பதை எளிதில் கணிக்க முடிகிறது.

தான் இருப்பதால் தான் அம்மாவுக்கு கெட்டது நடப்பதாக நினைத்து உடம்புக்கு முடியாத தாயை விட்டுச் செல்கிறார் இளம் வயது ராம்போ. சில ஆண்டுகள் கழித்து வளர்ந்த ராம்போவை(விஜய் சேதுபதி) காட்டுகிறார்கள். பகலில் கேப் டிரைவர், இரவில் பவுன்சர் என்று இரட்டை வாழ்க்கை வாழ்கிறார்.
அவர் நேர் எதிர் குணங்கள் கொண்ட கதீஜா(சமந்தா) மற்றும் கண்மணியை(நயன்தாரா) காதலிக்கிறார். இரண்டு பெண்களும் ப்ரொபோஸ் செய்யவே, தன் வாழ்க்கையில் இருந்த கெட்ட ராசி போய் தான் விரும்புவது எல்லாம் இரண்டு மடங்கு கிடைப்பதாக உணர்கிறார் ராம்போ.
ஆனால் இருவரில் ஒருவரை தேர்வு செய்ய வேண்டும் என்கிறபோது தான் பிரச்சனை ஏற்படுகிறது.
மூன்று கதாபாத்திரங்களுக்கும் விக்னேஷ் சிவன் கொடுத்திருக்கும் தனித் தனிக் கதை சுவராஸ்யமாக இருக்கிறது. படத்தின் ஆரம்பத்தில் எல்லாம் நன்றாக இருக்கிறது. ஆனால் படம் நகர நகர சொதப்புகிறது. விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா கூட்டணியை சரியாக பயன்படுத்தவில்லை.
நயன்தாரா தன் சகோதரி மற்றும் மாற்றுத்திறனாளி சகோதரனை பார்த்துக்கொள்ளும் விதம், அதை பார்த்து விஜய் சேதுபதி இம்பிரஸ் ஆவது அழகு. ராம்போ தன் காதலிகளுடன் தனித்தனியே இருக்கும்போது நன்றாக இருக்கிறது. ஆனால் மூன்று பேரும் சேரும் போது தான் படம் சொதப்புகிறது.அனிருத்தின் இசை தான் படத்தின் பெரிய பலமே. சமந்தாவின் காதலரான நன்றாக நடித்திருக்கிறார் முன்னாள் கிரிக்கெட் வீரரான ஸ்ரீசாந்த்.
ஆக,படம் ரிலீஸ் ஆன புதிதில் தியேட்டரில் ஒரு முறை படம் பார்ப்போம் .அதுவே ஒரு இரண்டு மூன்று மாதம் கழித்து சன் டிவியில்,இல்லனா விஜய் டிவில போட்ட நம்ம வீட்ல பாக்குறது இல்ல ,அந்த மாதிரிதான் இந்த படமும் தியேட்டர்ல பார்த்தாலும் எங்கேயோ பார்த்த மாதிரியே நமக்கு ஞாபகம் உண்டு பண்ணிடே இருக்கு இந்த படம்.
ஆக,படம் ரிலீஸ் ஆன புதிதில் தியேட்டரில் ஒரு முறை படம் பார்ப்போம் .அதுவே ஒரு இரண்டு மூன்று மாதம் கழித்து சன் டிவியில்,இல்லனா விஜய் டிவில போட்ட நம்ம வீட்ல பாக்குறது இல்ல ,அந்த மாதிரிதான் இந்த படமும் தியேட்டர்ல பார்த்தாலும் எங்கேயோ பார்த்த மாதிரியே நமக்கு ஞாபகம் உண்டு பண்ணிடே இருக்கு இந்த படம்.அதனாலேயே கதையிலும் கவனம் செலுத்த முடியல.படத்துல கதைன்னு ஒன்னும் பெருசா இல்ல .காத்து வாக்குல ரெண்டு காதலை ஒரு முறை பார்க்கலாம்.ரெண்டு முறை பார்க்க முடியாது.
விமர்சகர்
சரண்








