சாவீ – விமர்சனம்
சாவு வீட்டில் நடக்கும் கதைகள் நிறைய படங்களில் கிராமத்து பின்னணியில் வந்திருக்கின்றது நகரத்து பின்னணியில் வந்திருக்கும் படம் தான் இந்த சாவீ.
வேற்று மதத்தைச் சேர்ந்தவரை காதல் திருமணம் செய்ததற்காக அவரைத் திட்டமிட்டு அந்தப் பெண்ணின் அண்ணன்கள் கொன்றதாக முதலில் கதை சொல்லப்படுகிறது. ஆனால், அதற்குள் அவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்து விடுகிறது.
அவன்.வளர்ந்து அப்பாவைக் கொன்ற மாமன்கள் மீது கோபமாக இருந்தாலும் அதில் ஒரு மாமன் மகளை காதலிக்கிறான். அகாலமாக அந்த மாமன் இறந்துவிட, அன்றைய இரவில் அவரது பிணத்தைக் காணவில்லை.
பிணத்தை போய் யார் கடத்துவார்கள்? என்ற குழப்பத்தில் ஒட்டுமொத்த குடும்பமும் இருக்க என்ன ஆயிற்று என்பதுதான் கதை.
அவர் மட்டுமல்லாமல் ஏனைய கேரக்டர்களும் அப்படியேதான் செய்கிறார்கள். எந்த இடத்தில் சிரிக்க வைக்க வேண்டும், எந்த இடத்தில் அழ வைக்க வேண்டும் என்கிற எந்த இலக்கணத்தையும் இயக்குனர் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
பிணத்தைக் கண்டு பிடிக்கும் வேலையில் வரும் இன்ஸ்பெக்டர் ஆதேஷ் பாலா அவ்வப்போது டென்ஷனுடன் கத்துவதோடு சரி… ஆனால் பிணம் காணாமல் போனதன் பின்னணியில் அவரும் இருக்கக்கூடும் என்கிற சஸ்பென்ஸ் படம் நெடுக வருகிறது.
இவர்களுடன் ராட்சசன் யாசர், மாஸ்டர் அஜய், கவிதா சுரேஷ், ப்ரேம் கே சேஷாஸ்த்ரி உள்ளிட்டோர் பிற பாத்திரங்களை நிறை செய்கிறார்கள்.
புதிதாக ஒரு ஜேனரை கையில் எடுக்க வேண்டும் என்று இயக்குனர் நினைத்திருப்பார் போலிருக்கிறது. அவரது கட்டளைக்கு இணங்க ஒளிப்பதிவாளரும், இசையமைப்பாளரும் ரொம்பவும் மெனக்கெடாமல் இயல்பாக பணியாற்றி இருக்கிறார்கள்.
விளையாட்டாக ஒரு படம் பண்ண நினைத்திருக்கிறார் ஆண்டன் அஜித் என்பது புரிகிறது. படம் ஓடும் நூற்று சொச்சம் நிமிடங்களில் கிட்டத்தட்ட ஐந்து மரணங்கள் நிகழ்ந்து விடுகின்றன.
ஆனால் படத்தின் பாத்திரங்கள் எல்லோரும் பெரும்பாலும் சிரித்துக் கொண்டோ சிரிக்க வைத்துக் கொண்டோ இருக்கிறார்கள்.
இதில் சாவி எங்கிருந்து வருகிறது என்பது படம் பார்க்கும் எல்லோருக்கும் எழும் கேள்வி. அவர்களுக்கு ஒரு செய்தி… அது பூட்டைத் திறக்கும் சாவி அல்ல.
சாவு வீடு என்கிற தலைப்பின் சுருக்கம் தான் சாவீ.
நல்ல நிகழ்வுகளுக்கு போக மறந்தாலும் கெட்ட நிகழ்வுகளுக்கு போகாமல் இருக்கக் கூடாது.









