• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

“இதுவரை நீங்கள் பார்த்திராத ரவி தேஜாவை இதில் பார்க்கலாம்”… ‘இருமுடி கட்டு’ படத்தில் நம்பிக்கை, மனித உணர்வுகள் மற்றும் மனமாற்றத்தை மையமாகக் கொண்ட கதையைப் பற்றி இயக்குநர் சிவா நிர்வாணா!

by Tamil2daynews
August 21, 2026
in சினிமா செய்திகள்
0
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

“இதுவரை நீங்கள் பார்த்திராத ரவி தேஜாவை இதில் பார்க்கலாம்”… ‘இருமுடி கட்டு’ படத்தில் நம்பிக்கை, மனித உணர்வுகள் மற்றும் மனமாற்றத்தை மையமாகக் கொண்ட கதையைப் பற்றி இயக்குநர் சிவா நிர்வாணா!

 

உணர்வுப்பூர்வமான கதைகளுக்காக அறியப்படும் இயக்குநர் சிவா நிர்வாணா, மாஸ் மகாராஜா ரவி தேஜாவுடன் முதல் முறையாக இணைந்துள்ள ‘இருமுடி கட்டு’ திரைப்படம் ஆகஸ்ட் 21, 2026 அன்று உலகம் முழுவதும் வெளியாகிறது.

‘நின்னு கோரி’, ‘மஜிலி’, ‘டக் ஜெகதீஷ்’, ‘குஷி’ போன்ற உணர்வுப்பூர்வமான திரைப்படங்களின் மூலம் தனக்கென ஒரு தனித்துவமான அடையாளத்தை உருவாக்கிய இயக்குநர் சிவா நிர்வாணா, தற்போது ‘இருமுடி கட்டு’ திரைப்படத்தின் மூலம் புதிய களத்தில் அடியெடுத்து வைக்கிறார். மாஸ் மகாராஜா ரவி தேஜாவுடன் முதன்முறையாக இணைந்துள்ள இப்படம் குடும்பம், நம்பிக்கை, உறவுகள் மற்றும் மனமாற்றம் ஆகியவற்றை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது. இதுவரை ரசிகர்கள் பார்த்திராத முற்றிலும் மாறுபட்ட உணர்வுப்பூர்வமான கதாபாத்திரத்தில் நடிகர் ரவி தேஜா இப்படத்தில் நடித்துள்ளார்.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் சார்பில் நவீன் யெர்னேனி மற்றும் ஒய். ரவி சங்கர் தயாரித்துள்ள இப்படத்தை டி-சீரிஸ் பிலிம்ஸ் வழங்குகிறது. ‘இருமுடி கட்டு’ திரைப்படம் ஆகஸ்ட் 21, 2026 அன்று உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக திரையரங்குகளில் வெளியாகத் தயாராகி வருகிறது.

‘இருமுடி கட்டு’ திரைப்படத்தின் மையம் தந்தை மற்றும் மகளுக்கு இடையேயான அழகான உறவுதான். ஆனால், திரைப்படம் அதைக் கடந்து பல விஷயங்களைப் பேசுகிறது. ஐயப்ப தீட்சை, ஆன்மீகப் பயணம்,உணர்வுகள், உறவுகள், தவறுகள், மனமாற்றம் மற்றும் நம்பிக்கையின் சக்தி ஆகியவற்றைப் பற்றி படம் பேசுகிறது.

‘இருமுடி கட்டு’ குறித்து இயக்குநர் சிவா நிர்வாணா பகிர்ந்து கொண்டதாவது, “‘இருமுடி கட்டு’ திரைப்படத்தை எழுதத் தொடங்கியபோது, மனித உணர்வுகளை ஆழமாக பேசும் ஒரு கதையைச் சொல்ல வேண்டும் என்று விரும்பினேன். ஐயப்ப சுவாமியைப் பின்னணியாகக் கொண்டிருப்பது படத்தின் முக்கியமான அம்சம். ஆனால், பக்தியை மட்டுமே மையமாகக் கொண்டு இந்தக் கதை உருவாக்கப்படவில்லை. ஒரு தந்தைக்கும் அவரது மகளுக்கும் இடையேயான உறவும், அந்த உறவிலிருந்து உருவாகும் உணர்வுகள், முடிவுகள் மற்றும் மனமாற்றங்களும்தான் கதையின் மையம். ஐயப்ப சுவாமி மற்றும் அவரது யாத்திரையைச் சுற்றியுள்ள பாரம்பரியங்கள்  சிறுவயது முதலே எனக்கு மிகவும் பரிச்சயமானவை. அந்தப் பழக்கமான ஆன்மீகப் பின்னணியைப் பயன்படுத்தி, கதைக்கு மேலும் ஒரு உணர்வுப்பூர்வமான பரிமாணத்தைச் சேர்க்க விரும்பினேன். ‘இருமுடி கட்டு’ திரைப்படத்தில் பக்தி என்பது மனித வாழ்வில் தனித்த ஒன்று கிடையாது. மாறாக அது நம் வாழ்வின் ஒரு அங்கம். அதுவே கதாநாயகனின் மனமாற்றத்திற்கு முக்கிய காரணமாக அமைகிறது.

ரவி தேஜா சாருடன் பணியாற்றியது அற்புதமான அனுபவம். இதுவரை பார்த்திராத ஒரு கதைக்களத்தில் ரசிகர்கள் அவரை பார்க்க வேண்டும் என்று விரும்பினேன். அதே நேரத்தில், அவரின் வழக்கமான எனர்ஜி மற்றும் வசீகரத்தையும் இதில் பார்ப்பீர்கள். அவரது கதாபாத்திரம் பல்வேறு உணர்வுகளை கடந்து செல்லும். கதாபாத்திரத்தின் ஒவ்வொரு பரிமாணத்தையும் அவர் முழு அர்ப்பணிப்புடன் நடித்துள்ளார்.

பிரியா பவானி சங்கர், பேபி நக்ஷத்ரா மற்றும் ஒட்டுமொத்த நடிகர்கள் குழுவினரும் சிறப்பாக உழைத்துள்ளனர். படத்தில் இடம்பெறும் ஒவ்வொரு உறவுக்கும் முக்கியத்துவம் கொடுத்து கதையை எழுதியுள்ளேன். ஏனெனில், உணர்வுகள் வெறும் கதையை நகர்த்துவதற்கான கருவியாக இல்லாமல், இயல்பானதாக இருக்க வேண்டும் என்று விரும்பினேன். தயாரிப்பாளர்கள் நவீன் யெர்னேனி சார், ஒய். ரவி சங்கர் சார் மற்றும் ஒட்டுமொத்த மைத்ரி மூவி மேக்கர்ஸ் குழுவினருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தக் கதையின் மீது அவர்கள் வைத்த நம்பிக்கை மிகவும் முக்கியமானது. அவர்கள் கொடுத்த ஆதரவால்தான் இந்தப் படத்தை பிரம்மாண்டத்துடனும் சிறந்த தொழில்நுட்பத் தரத்துடனும் உருவாக்க முடிந்தது. ஜி.வி. பிரகாஷ் குமாரின் இசையும் நாங்கள் உருவாக்கிய உலகத்திற்கு மேலும் வலு சேர்த்தது.

இறுதியாக, பார்வையாளர்கள் தங்களையே அந்த உணர்வுகளில் காணும்போதுதான் ஒரு கதையுடன் உண்மையாக இணைகிறார்கள் என்று நான் நம்புகிறேன். குடும்பம், உறவுகள், நம்பிக்கை மற்றும் மனமாற்றம் ஆகியவற்றின் மூலம் அந்த இணைப்பை உருவாக்க ‘இருமுடி கட்டு’ முயற்சிக்கிறது. அதே நேரத்தில், ரவி தேஜா திரைப்படத்திலிருந்து ரசிகர்கள் எதிர்பார்க்கும் திரையரங்க அனுபவத்தையும் வழங்கும். இந்தப் படம் பார்வையாளர்களுக்கு நிச்சயம் மறக்க முடியாத அனுபவத்தை கொடுக்கும் என்று மனதார நம்புகிறேன்” என்றார்.

ரவி தேஜா மற்றும் சிவா நிர்வாணா முதன்முறையாக இணையும் இந்தத் திரைப்படத்தில், பிரியா பவானி சங்கர் காவேரி என்ற கதாபாத்திரத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். சாய் குமார், பேபி நக்ஷத்ரா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு விஷ்ணு சர்மா ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரவீன் புடி படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார். ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். சாஹி சுரேஷ் தயாரிப்பு வடிவமைப்பாளராகவும், நரேஷ் பாபு பி. திரைக்கதை ஒருங்கிணைப்பாளராகவும் பணியாற்றியுள்ளனர். டி-சீரிஸ் பிலிம்ஸ் சார்பில் குல்ஷன் குமார், பூஷன் குமார் மற்றும் டி-சீரிஸ் பிலிம்ஸ் இப்படத்தை வழங்குகின்றனர். சிவ் சனானா இணைத் தயாரிப்பாளராகவும், நீரஜ் கல்யாண் டி-சீரிஸின் தலைவராகவும், செர்ரி தலைமை செயல் அதிகாரியாகவும் செயல்படுகின்றனர்.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் சார்பில் நவீன் யெர்னேனி மற்றும் ஒய். ரவி சங்கர் தயாரித்து, டி-சீரிஸ் பிலிம்ஸ் வழங்கும் ‘இருமுடி கட்டு’ திரைப்படம், மாஸ் மகாராஜா ரவி தேஜா, பிரியா பவானி சங்கர் மற்றும் இயக்குநர் சிவா நிர்வாணா ஆகியோரின் கூட்டணியில் உருவாகியுள்ள இப்படம், ஆகஸ்ட் 21, 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

Previous Post

வாணவேடிக்கை படத்தின் 25 வது நாள் படப்பிடிப்பில் படப்பிடிப்பு தளத்திற்கு வருகை தந்து படக்குழுவினரோடு உணவருந்தி புகைப்படம் எடுத்துக்கொண்ட தயாரிப்பாளரும் எம்பியுமான எல்.கே. சுதீஷ்…

Next Post

ஊடகங்களுக்கும், ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்த தி ஒன் சூர்யாவின் ‘விஸ்வநாத் & சன்ஸ்’ படக்குழு !

Next Post

ஊடகங்களுக்கும், ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்த தி ஒன் சூர்யாவின் 'விஸ்வநாத் & சன்ஸ்' படக்குழு !

Popular News

  • சாய்ரா இயக்கி நடிக்கும் புதிய திரைப்படம் ‘ஹலோ மிஸ்’

    0 shares
    Share 0 Tweet 0
  • ராம் அண்ட் லீலா – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • ஒன்மேன் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • “இதுவரை நீங்கள் பார்த்திராத ரவி தேஜாவை இதில் பார்க்கலாம்”… ‘இருமுடி கட்டு’ படத்தில் நம்பிக்கை, மனித உணர்வுகள் மற்றும் மனமாற்றத்தை மையமாகக் கொண்ட கதையைப் பற்றி இயக்குநர் சிவா நிர்வாணா!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஊடகங்களுக்கும், ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்த தி ஒன் சூர்யாவின் ‘விஸ்வநாத் & சன்ஸ்’ படக்குழு !

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

”நல்ல கதைகளை தமிழ் சினிமா ரசிகர்கள் எப்போதும் வரவேற்பார்கள். ’மொத ராத்திரி’ திரைப்படமும் நிச்சயம் அவர்களை மகிழ்விக்கும்”: தயாரிப்பாளர்கள் நவீன் யெர்னேனி மற்றும் ஒய். ரவி சங்கர்!

August 21, 2026

அமேசான் எம்ஜிஎம் ஸ்டுடியோஸ் மற்றும் கலர் யெல்லோ இணைந்து வழங்கும் இந்தியாவின் ஃபேன்டஸி குடும்பத் திரைப்படமான, யாமி கெளதம் கர் நடிப்பில் உருவாகியுள்ள ‘நய்யி நவெல்லி’!

August 21, 2026

செம்போஸ்கி மோஷன் பிக்சர்ஸ், ஃபார்ஸ் ஃபிலிம்ஸ் வழங்கும் ‘டிஸ்கோ’ – நவம்பர் 6-ல் உலகமெங்கும் ரிலீஸ்!

August 21, 2026

விக்கல்ஸ் விக்ரம் மற்றும் ஆரத்தி கிருஷ்ணாவின் ‘லைட்வெயிட்,பேபி!’ படத்தின் கலகலப்பான ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

August 21, 2026

சாய்ரா இயக்கி நடிக்கும் புதிய திரைப்படம் ‘ஹலோ மிஸ்’

August 21, 2026

“பார்வையாளர்கள் ஒவ்வொருவரின் மனதை நெகிழ வைக்கும் குடும்பம், உணர்வு மற்றும் மாற்றத்தின் கதைதான் ‘இருமுடி கட்டு’”: மைத்ரி மூவி மேக்கர்ஸ்!

August 21, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.