
நெல்சன் இயக்கத்துல சிவகார்த்திகேயன் நடிச்சிருக்கிற படம்தான் டாக்டர். அனிருத் இசையமைச்சிருக்கிற இந்தப் படத்துல செல்லம்மா சாங் ஏற்கனவே பட்டி தொட்டியெலாம் பயங்கர ஹிட்டு.. இந்த நேரத்துல டாக்டர் படம் தியேட்டர்ல ரிலீஸாகுமா இல்ல ஓடிடில வருமான்னு சினிமால இருக்கிற நெறைய பேருக்கே சந்தேகமா இருந்துச்சு.. ஏன்னா விஜய் நடிச்ச மாஸ்டர் படத்துக்கு வந்த கூட்டம் அதுக்குப் பிறகு ரிலீஸான எந்தப் படத்துக்கும் வரலைங்கிறதுதான்.. இந்த நேரத்துல தான் கார்த்திக் சுப்புராஜ் டைரக்ஷன்ல தனுஷ் நடிச்சிருக்கிற ஜகமே தந்திரம் கூட ஓடிடில ரிலீஸாகப் போகுது.. இதனாலதான் டாக்டர் படம்கூட ஓடிடில தான் ரிலீஸ்ன்னு ஒரு பேச்சு களம்புச்சு.. ஆனா அதுக்கெல்லாம் ஒரேடியா முற்றுப்புள்ளி வைக்கிற மாறி டாக்டர் மார்ச் 26 ஆம் தேதி ரிலீஸ்னு சென்னை சிட்டி முழுக்க போஸ்டர் அடிச்சு ஒட்டுனாரு தயாரிப்பாளர்.
ஆனா அடுத்த ரெண்டு நாள்ள அவங்களே எதிர்பார்க்காத டிவிஸ்ட். தேர்தல் ஆணையம் வற்ர ஏப்ரல் 6 ஆம் தேதிய அன்னிக்கு எலெக்ஷன்னு தேதியா அறிவிச்சிட்டாங்க.
சோ இந்த நேரத்துல வெளியிட்டா ஆடியன்ஸோட கவனமும் மீடியாவோட ஃபோகஸும் எலெக்ஷன் மேல மட்டுந்தான் இருக்கும்னு தெரிஞ்சிக்கிட்ட டாக்டர் பட தயாரிப்பாளர் மார்ச் 26 ஆம் தேதில டாக்டர ரிலீஸ் பண்ண வேண்டாம்னு முடிவு பண்ணிட்டாரு.


சரி.. வேற எப்போ ரிலீஸ் பண்ணலாம்னு ரொம்பவே யோசிச்சிட்ட்ருந்த நேரத்துல தான் ரம்ஜான் பண்டிகையான மே 14 அன்னிக்கு ரிலீஸ் பண்ணலாம்னு முடிவெடுத்திருக்காங்க.
ஆனா அதுலயும் ஒரு மெகா டிவிஸ்ட்.. வெங்க பிரபு இயக்க்த்துல சிம்பு நடிச்சிருக்கிற படமான மாநாடு படத்த இந்த வருஷ ரம்ஜானுக்கு ரிலீஸ் பண்றோம்னு பல மாசத்துக்கு முன்னாலயே ஓபனாவே சொல்லிட்டாங்க. நெலைமை இப்படி இருக்கிறப்போ சிம்பு கூட சிவகார்த்திகேயன் மோதுவாரான்னு எல்லாருக்குமே சந்தேகம்.
ஆனா கண்டிப்பா மோதலாம்னு சிவகார்த்திகேயன் உறுதியா இருக்காராம். அப்படி என்ன சிம்பு மேல சிவகார்த்திகேயனுக்கு காண்டுன்னு நெனைக்கிறவங்களுக்கு ஒரு ஃப்ளாஷ்பேக். சரியா பத்து வருஷத்துக்கு முன்னால அதாவது 2011 ஆவது வருஷம் சிம்பு நடிச்சு பாதியிலயே ட்ராப் ஆன படம்தான் வேட்டை மன்னன். இந்த படம் ட்ராப்பானதுக்குக் காரணமே பழைய சிம்புவோட அட்ராச்சிட்டிதான்.
அந்த வேட்டை மன்னன் படத்தோட டைரக்டர்தான் டாக்டர் படத்தோட டைரக்டர் நெல்சன். அந்த படத்துல சிம்புகூட செகண்ட் ஹீரோவா நடிச்சிருந்த ஜெய் கேரக்டர்ல முதல்ல நடிக்கவிருந்தது சிவகார்த்திகேயன் தான். சிம்புவுக்கு சிவகார்த்திகேயனோட நக்கல் கடுப்பேத்துனதால சிவகார்த்திகேயன தூக்க சொல்லிட்டாராம் சிம்பு. இதனால விரக்தியான சிவகார்த்திகேயன் அந்த படத்துல அஸிஸ்டெண்ட் டைரக்டரா வேலை பார்த்திருக்காரு.



ஆனா சூர்ய வம்சத்துல தேவயாணி சொல்ற காலம் ரொம்ப வேகமா சுழலுதுல்லங்கிற டயலாக்குக்கு ஏத்த மாறியே ஒரு பக்கம் சிவகார்த்திகேயன் இன்னிக்கு தமிழ் சினிமாவுல முன்னனி ஹீரோவா வளந்துட்டாரு.. வேட்டை மன்னன் டைரக்டர் நெல்சனும் கோலமாவு கோகிலா ஹிட்டு மூலம் இன்னிக்கு தளபதி விஜய் படத்தை இயக்கிற அளவுக்கு பெரிய ஆளாயிட்டாரு..
சோ ரெண்டு பேருக்கும் இப்படி கசப்பான ஃப்ளாஷ்பேக்குக்குக் காரணமான சிம்புவ இந்த தடவை பழி வாங்கறதுக்கு இதுதான் சரியான நேரம்னு சிவகார்த்திகேயன் துணிஞ்சு டாக்டர ரம்ஜானுக்கே ரிலீஸ் பண்றதுல பிடிவாதமா இருக்காராம்.
இந்த செய்தி உங்களுக்குப் பிடிச்சிருந்தா லைக் பண்ணுங்க.. இதுபத்தின உங்க கருத்த கமெண்ட் பண்ணுங்க.. உங்க ஃப்ரண்ட்ஸ்ங்களுக்கு ஷேர் பண்ணுங்க.. இதுபோன்ற சுவையான செய்திகளுக்கு Tamil today news சேனலை சப்ஸ்க்ரைப் பண்ணுங்க.. நன்றி வணக்கம்..








