
இவர்களுக்கு பிறந்த குழந்தை என்ன ஆனது? என்பதை ஒரு மெடிக்கல் கரைம் திரில்லர் பின்னணியில், மலையாள, ஹிந்தி த்ரில்லர் திரைப்படஙகளுக்கு இணையாக தந்துள்ளார் டைரக்டர். இதனுடன் குழந்தை எமோஷன் என்ற அம்சத்தையும் சரியாக உணர்த்தி உள்ளார். படம் தொடங்கி அரைமணி நேரத்திற்கு பிறகு பரபரப்பாக நகரும் திரைக்கதையில் நாம் எதிர் பார்க்காத பல ட்விஸ்ட்கள் உள்ளன.
நடிப்பில் முதல் மதிப்பெண் பெறுவது நிமிஷா தான். வெகுளியாக வரும் போதும், குழந்தை தனது இல்லை என்று ஆர்ப்பாட்டம் செய்யும் போதும், வளர்த்த குழந்தையை பிரிய மனமில்லாமல் தவிக்கும் போதும் நடிப்பில் ஆஹா சொல்ல வைக்கிறார்.
தனக்கு ஒரு வெற்றி வேண்டும் என்பதை புரிந்து கொண்டு ஆக்ஷன், எமோஷன் இரண்டையும் கலந்து தந்திருக்கிறார் அதர்வா. “நம்ம நாட்டுல பணம், காசு இல்லைன்னா கூட கண்டுக்க மாட்டான். ஆனால் குழந்தை இல்லைன்னா அந்த கீரை சாப்பிடு, இந்த டாக்டரை பாரு, பரிகாரம் பண்ணு என ஆளாளுக்கு அட்வைஸ் பண்ணு வான். குழந்தைக்காக தவம் இருக்கும் தம்பதிகள் இருக்கும் இதே நாட்டில் தான் தாய், தந்தை இல்லாத ஆதரவற்ற குழந்தைகள் நிறைய பேர் இருக்காங்க” என வரும் வசனம் நம்மை யோசிக்க வைக்கிறது.
படத்தின் பாடல்களை விட இறுதியில் வரும் கைலாய வாத்திய இசை சிறப்பாக உள்ளது. படத்தில் தேவையில்லாமல் வரும் ஒரு குத்து பாடலை தவிர்திருக்கலாம்.
இந்த ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற ஒரு சில தமிழ் படங்களின் வரிசையில் DNA படம் இடம் பிடித்திருப்பது பெரும் மகிழ்ச்சி.