கோவில்பட்டியில் தொடங்கியது சிம்புவின் அரசன் படப்பிடிப்பு!
வடசென்னை உலகம் பெரிதாகிறது: வெற்றிமாறன் – சிலம்பரசன் டிஆர் – கலைப்புலி s தாணு வி கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் மிகவும் எதிர்பார்க்கப்படும் ‘அரசன்’ படப்பிடிப்பு கோவில்பட்டியில் தொடங்கியது

டிசம்பர் முதல் வாரத்தில் கோவில்பட்டியில் தொடங்கிய அரசன் படத்தின் படப்பிடிப்பு இந்த மாத இறுதி வரை தொடரும். வெற்றிமாறனின் பாணியில் அரசன் படத்தில் உள்ள முக்கியமான காட்சிகளை குழுவினர் தற்போது படமாக்கி வருகின்றனர். விடுதலை படத்தின் பிரமாண்ட வெற்றிக்கு பிறகு, மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மீண்டும் இயக்குனர் வெற்றிமாறனுடன் இணைந்து இந்த படத்தில் பணியாற்றுகிறார். விரைவில் அரசன் படப்பிடிப்பில் இணைவார் .
ஒரு முக்கிய மைல்கல்லாக, ‘அரசன்’ படம் ராக்ஸ்டார் அனிருத், சிலம்பரசன் டிஆர் மற்றும் வெற்றிமாறன் ஆகியோரை முதல் முறையாக ஒன்றிணைக்கிறது . அக்டோபர் மாதம் அனிருத் பிறந்தநாளில் வெளியிடப்பட்ட அரசன் ப்ரோமோ, படப்பிடிப்பு தொடங்கும் முன்பே ரசிகர்கள் மற்றும் பார்வையாளர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது மற்றும் மகத்தான வரவேற்பை பெற்றது.
வடசென்னை உலகத்திற்கு ஒரு சக்திவாய்ந்த கூடுதலாக ‘அரசன்’ இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது, இது ஒரு வித்தியாசமான சினிமா அனுபவத்தை வழங்க ஒரு சிறப்பான குழுவை ஒன்றிணைக்கிறது. படத்தின் நடிகர்கள் தொடர்பான அறிவிப்புகள் விரைவில் வெளியிடப்படும்.









