| நடிகர் | ரிச்சர்டு |
| நடிகை | ஷீலா ராஜ்குமார் |
| இயக்குனர் | மோகன் |
| இசை | ஜூபின் |
| ஓளிப்பதிவு | மனோஜ் நாராயணன் |
ரிச்சர்ட் விழுப்புரம் அருகே இருக்கும் சேந்தமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர். இரட்டை கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு சிறைக்கு செல்கிறார். பின்னர் ஜாமினில் வெளியே வரும் ரிச்சர்டு, சென்னையில் தனது நண்பருடன் தங்குகிறார். ராயபுரத்தில் இருக்கும் பதிவாளர் அலுவலகத்தில் டீ விற்று வருகிறார். அங்கே திருமண பதிவு விஷயத்தில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதையும் போலி திருமணங்கள் நடத்தப்படுவதையும் கண்டுபிடிக்கிறார்.
இதற்கு அரசு அதிகாரியான பதிவாளரும் உடந்தை என்பதால் இந்த குற்றத்தை பொறி வைத்து பிடிக்க ரிச்சர்டு திட்டமிடுகிறார். இந்த சூழலில் போலி திருமணங்கள் செய்து வைக்கும் நபர்களை கொன்று அதன் வீடியோக்களை கமிஷனருக்கே அனுப்பி வைக்கிறார். இதையடுத்து ரிச்சர்ட் என்ன செய்தார்? அவர் மனைவி திரெளபதிக்கு என்ன ஆனது? திருமண மோசடிகளுக்கு அவர் தீர்வு கண்டாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.
திரௌபதி படத்தின் ட்ரெய்லரால் எதிர்பார்ப்பு அதிகம் ஏற்பட்டது. ஆனால் ட்ரெய்லர் அளவுக்கு படம் இல்லை என்றே சொல்ல வேண்டும். சர்ச்சைக்குரிய வசனங்கள் மியூட் செய்யப்பட்டுள்ளது. அதுவும் நல்லதுக்கே. சாதிப் பிரச்சனையை வைத்து காசு பார்க்கும் ஆட்களை படம் குறி வைக்கிறது.
முதல் பாதி பரபரப்பாக செல்கிறது. திரைக்கதை பரிட்சயமாக உள்ளது என்றாலும் பிரபாகரனின் வாழ்க்கை, திரௌபதியின் மரணத்தை சுற்றியுள்ள விஷயங்கள் சுவாரஸ்யமாக உள்ளது. இரண்டாம் பாதி மெதுவாக செல்வதுடன், நீளமும் அதிகம்.
இரண்டாம் பாதியில் மெசேஜ் சொல்வதற்கு தான் அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. பிரபாகரனுக்குள் இருக்கும் கோபத்தை அவர் முகத்தில் காண முடியவில்லை. ரிச்சர்ட் மட்டும் அல்ல மற்றவர்கள் நடிப்பும் மேலோட்டமாக உள்ளது.









