பா.இரஞ்சித் ஒருங்கிணைத்த சமூக நீதியைப்பேசும் மேடை நாடகங்கள்
பி.கே ரோசி திரைப்படவிழா, புகைப்படக்கண்காட்சி, கேஸ்ட்லெஸ் கலெக்டிவ் இசை நிகழ்ச்சியைத்தொடர்ந்து மேடை நாடகங்களும் நடைபெற்றன.
சென்னை ஐ, சி எப் அம்பேத்கர் அரங்கத்தில் சமுக நீதியைப்பேசும் நாடகங்கள் நடைபெற்றன.


சினிமாவிற்கு முன்பு நான் கல்லூரிக்காலங்களில் நாடகங்கள் நடத்தியிருக்கிறேன்.சினிமாவைப்போல நாடகங்கள் மீதும் பெரும் விருப்பம் உண்டு.
பிரிவினைவாதம் தலைவிரித்தாடும் இந்த காலகட்டத்தில் கலைகள் வழியாக நாம் சமத்துவத்தை யும் , மனிதநேயத்தையும் பேசவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். சினிமா, மற்றும் பாடல்கள், ஓவியங்கள், புகைப்படங்கள் ,நாடகங்கள் இன்னும் என்னென்ன கலைகள் வழியாகவெல்லாம் இந்த சமூகத்தில் அன்பு திழைத்திருக்க மக்கள் மத்தியில் நம்மால் பேச முடியுமோ நாம் பேசுவோம்.

சென்னை அம்பேத்கர் மணிமண்டபத்தில் புகைப்படக்கண்காட்சி நடைபெற்றுவருகிறது.மிக முக்கியமான புகைப்படங்கள் இந்த கண்காட்சியில் இடம்பெருகின்றன.ஓவியக்கண்காட்சி வருகிற 23ம் தேதி துவங்கவிருக்கிறது.