“4த் ஃப்ளோர்” திரைப்பட இசை வெளியீட்டு விழா !!
MANO CREATION சார்பில் தயாரிப்பாளர் A.ராஜா தயாரிப்பில், இயக்குநர் L R சுந்தரபாண்டி இயக்கத்தில், நடிகர் ஆரி அர்ஜுனன் கதாநாயகனாக நடிக்க, வித்தியாசமான களத்தில் மர்மங்கள் நிறைந்த பரபரப்பான திரில்லராக உருவாகியுள்ள திரைப்படம் “4த் ஃப்ளோர்”.
இப்படம் வரும் பிப்ரவரி மாதம் 27 ஆம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா படக்குழுவினருடன், திரை பிரபலங்கள் கலந்துகொள்ள பத்திரிக்கை, ஊடக, நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.
இந்நிகழ்வினில்..,
எல்லாருக்கும் வணக்கம். எங்களின் 4த் ஃப்ளோர் படம் நல்லபடியாக வந்துள்ளது. நிறைய பேர் கஷ்டப்பட்டடு இப்படத்தை முடித்துள்ளோம். இப்போதைய சினிமாவில் பணம் போடுவது பெரிய பிரச்சனை இல்லை. ஆனால் இந்த காலத்தில் ஒரு சரியான படத்தை கொண்டு வருதான் ரொம்ப பெரிய விஷயம். அந்த விஷயத்தில் இந்த படம் நல்லபடியாக வந்திருக்கிறது. ஒத்துழைத்த ஆதி, இயக்குநர் மற்றும் குழுவினருக்கு நன்றி. அனைவரும் பார்த்து ஆதரவு தாருங்கள் நன்றி.
4த் ஃப்ளோர் டிரெய்லரைப் பார்த்தேன். நன்றாக இருக்கிறது. ராஜா சார், நீங்கள் திருப்பூரிலிருந்து வந்து இவ்வளவு பேஷனோட ஒரு படம் எடுத்திருக்கிறீர்கள். உங்களுடைய இந்த முயற்சி மிகப் பெரிய வெற்றி அடையணும். ஆரி 10 வருடமாக நல்ல படங்கள் செய்து வருகிறார். அவர் பெரிய வெற்றி பெற வேண்டும். இன்றைக்கு தமிழ் சினிமாவில் நிறைய புது புது, திறமையாளர்கள் தமிழ்நாட்டின் பல பகுதிகளிலிருந்து வருகிறார்கள். எல்லாருமே சரியான வழிகாட்டுதலோடு, குறைந்த பட்ஜெட்டிலேயே அவங்க படங்களை எடுக்க உதவி செய்தால், இன்னும் நிறைய நல்ல படைப்பாளிகள், தமிழ் சினிமாவுக்குள் வர முடியும். இந்த படத்தின் டிரெய்லரிலேயே நிறைய விஷயங்களை சொல்லியிருக்கிறார்கள். அனிமேஷன், திரில்லர், கனவுகள்… ஒரு மனிதனுடைய கனவிலிருந்து வர்ற விஷயங்கள் எப்படி நிஜமாக மாறுது, அதிலிருந்து என்னென்ன சம்பவங்கள் நடக்குது, அந்த சம்பவங்கள் உண்மையாகும்போது, ஹீரோ சந்திக்கிற பிரச்சனைகள் என்ன?, இதை எல்லாம் டிரெய்லரிலேயே அழகாக சொல்லியிருக்கிறார்கள். படம் வெற்றி பெற என் வாழ்த்துக்கள்.
இயக்குநர் விஜய் மில்டன் பேசியதாவது..,என்று நிரூபிக்கும் ஒரு முயற்சி.இந்த படம் அனைவருக்கும் அடுத்த கட்டப் பயணமாக அமையட்டும் வாழ்த்துக்கள்.
அந்த ஜானருக்கு ஒரு உத்தரவாதம் எப்போதும் இருக்கும். அதாவது, சரியான திரைக்கதையும், நல்ல விளம்பரமும் இருந்தால் அந்த படம் நிச்சயமாக ஓடும். அந்த எல்லா அம்சங்களும் இந்த படத்தில் இருக்கிறது. குறிப்பாக, டைட்டில் டிசைன் கூட ரொம்ப அழகாகவும் கவனத்தை ஈர்க்கும் வகையிலும் அமைந்திருக்கிறது. இந்த படத்திற்கு என்னுடைய மனப்பூர்வமான வாழ்த்துகள்.
“திருப்பூர் புரொடியூசர்ஸ்” உடன் படம் பண்ண வேண்டும் என்ற ஆசை எனக்கு பல வருடங்களாக இருந்தது. அந்த வகையில், இந்த படத்தை தயாரித்து, அதை ரிலீஸ் வரை கொண்டு வந்திருக்கிறீர்கள் என்பதே ஒரு பெரிய விஷயம். அதற்காக முதலில் நான் உங்களுக்கு நன்றி சொல்கிறேன். இன்று பலர் சினிமாவை வேறு நோக்கங்களுக்காக அணுகுகிறார்கள். ஆனால் நீங்கள் முழுக்க முழுக்க சினிமாவை மட்டுமே நம்பி, அதையே நோக்கமாக கொண்டு வந்திருக்கிறீர்கள். அது எனக்கு சந்தோஷம்.
இந்த படத்தைப் பற்றி பேசும்போது, முதல் இம்ப்ரஷன் என்றால் அது நிச்சயமாக டைட்டில் டிசைன் தான். 4த் ஃப்ளோர் என்ற வார்த்தைக்கு இவ்வளவு கம்பீரமும், அழகும், அர்த்தமும் கொடுத்திருக்கிறார்கள். அந்த டைட்டிலே இந்த படத்தை பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தை உருவாக்குகிறது. படத்தின் மற்ற எல்லா அம்சங்கள் பார்த்தால், எல்லாமே ஒரு நம்பிக்கையை தருகிறது. இது இன்றைய தலைமுறைக்கும், அடுத்த தலைமுறைக்கும் பிடிக்கும் வகையிலான ஒரு முயற்சி என்று எனக்கு தோன்றுகிறது.

இது ராஜா சார் தயாரித்த நான்காவது திரைப்படம். ராஜா சாரை நான் முதலில் சந்தித்தது, “இந்த படம் நான் செய்வதாக விவாதிக்காகத்தான். ஆனால் அந்த உரையாடலுக்குப் பிறகு, அவர் எவ்வளவு நேர்மையான, தெளிவான தயாரிப்பாளர் என்பதை புரிந்து கொண்டேன். ஒரு கதைக்கு என்ன தேவையோ, அதை முழுமையாக செய்து தரக்கூடியவர் ராஜா சார். நல்ல தயாரிப்பாளர்.
இந்த படத்தில் ஒளிப்பதிவு செய்த லக்ஷ்மணன் பற்றியும் சொல்லியே ஆக வேண்டும்.கேமராவில் அவர் செய்த வேலை மிகவும் அருமை. அதுமட்டுமல்ல, அவர் ஒரு நல்ல நண்பரும் கூட. அவருக்கு வாழ்த்துக்கள்.
இன்று நான் இங்கே வந்திருப்பதற்கான இன்னொரு முக்கியமான காரணம் என் நண்பர்… என் மச்சான்… ஆரி.நாங்கள் இருவரும் ஒரே காலகட்டத்தில் Mr. Chennai Finalists ஆக எங்கள் பயணத்தை ஆரம்பித்தவர்கள். அந்த நேரத்திலிருந்து இன்று வரை, ஆரியின் பயணம் எப்போதுமே உழைப்பின் அடையாளமாகத்தான் இருக்கிறது.அவன் மிகக் கடினமாக உழைக்கும் மனிதன். ஒரு நல்ல நடிகன். அதற்கும் மேலாக, ஒரு நல்ல நண்பன்… ஒரு நல்ல மனிதன். எந்த விதமான ஈகோவும் இல்லாமல், யார் எப்போது என்ன உதவி கேட்டாலும் “பண்ணிடலாம்” என்று முன்னால் வந்து நிற்பவன். இந்த படம் நல்லபடியாக ஓட வேண்டும் என்று என் மனதார நான் வேண்டிக்கொள்கிறேன். இந்த படக்குழுவின் உழைப்புக்கு நிச்சயமாக ஒரு நல்ல வெற்றி கிடைக்கும் என்று நம்புகிறேன். நன்றி.
இன்று என்ன பேச வேண்டும் என்று முன்பே திட்டமிட்டு வரவில்லை. ஆனால் மேடையில் நின்றபோது ஒரு விஷயம் மட்டும் தெளிவாக இருந்தது – இந்த படத்திற்கு உயிர் கொடுத்தவர் தயாரிப்பாளர் ராஜா சார் என்பதுதான். ராஜா சார் ஒரு குழந்தை மனசு கொண்டவர். இந்த படத்தின் மூலமாகத்தான் நான் அவரை நெருக்கமாக அறிந்தேன். ஆனால் அவருக்குள் இருக்கும் தீவிரமும், இந்த படத்தை எப்படியாவது மக்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்ற வெறியும் என்னை மிகவும் ஈர்த்தது. இந்த விழாவுக்கும், இந்த ரிலீஸுக்கும் நான் வந்ததற்கான ஒரே காரணம் அவர்தான்.
சின்ன படங்கள் ஜெயிக்கணும் என்று நாம் எல்லாரும் பேசிக்கிட்டே இருக்கிறோம். ஆனால் அது நடக்கணும்னா, இப்படிப்பட்ட நேர்மையான முயற்சிகள் வெற்றி பெற வேண்டும். நான் செய்த பல படங்களின் இசை என் ஸ்டூடியோவுக்குள்ளேயே தங்கிப் போயிருக்கிறது. அந்த உழைப்பு வெளியே வந்து ஜெயிக்கணும்னா, இந்த மாதிரி படங்கள் வெற்றி பெற வேண்டும்.
ஆரி ப்ரோவுடன் ரொம்ப நாளாக ஒரு படம் செய்ய வேண்டும் என்று ஆசை இருந்தது. இன்று அது நிறைவேறியிருக்கிறது. அவர் ஒரு நடிகன் மட்டும் இல்ல; ஒரு சகோதரன் மாதிரி. மிக நேர்மையான, பொறுமையான, சின்சியரான மனிதர்.

‘4த் ஃப்ளோர்’ என்ற டைட்டிலே மிக அட்டகாசமாக இருக்கிறது. ஒரு படத்திற்கு முதல் டிக்கெட் என்பது அதன் டைட்டிலும், அதன் விளம்பர முகமும் தான். ஒரு மனிதன் திரையரங்குக்குள் நுழைய வேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்குவது அந்த முதல் பார்வையே. அதை இப்படம் உருவாக்கியுள்ளது.ஆரியை பல வருடங்களாக எனக்குத் தெரியும் பிக்பாஸில் ஜெயித்த போது அதன் புகழை இயற்கை விவசாயத்துக்கு பயன்படுத்தியவர். மிகச்சிறந்த மனிதர். அவரது இந்தத் திரைப்படம் பெரிய வெற்றி பெற வாழ்த்துகள்.
எனக்கு முதன்முதலில் சினிமாவை உணர வைத்தவர் என்றால், அது ராஜா சார் தான். சென்னை வந்த போது, ஆரம்பித்த நட்பு, அடுத்தடுத்த தலைமுறைகளிலும் தொடர வேண்டும் என்பதே என் ஆசை. அந்த நம்பிக்கையோடுதான் நாங்கள் இந்தப் பயணத்தை தொடர்ந்து வருகிறோம்.இந்த படம் 27-ஆம் தேதி ரிலீஸ் ஆகப் போகிறது. அதற்காக நாங்கள் முழு நம்பிக்கையோடு, கவனமாக தயாராகிக் கொண்டிருக்கிறோம். மீண்டும் ஒரு வெற்றியாக இந்த படம் மாற, உங்கள் அனைவரின் ஆதரவும், ஊக்கமும் எங்களுக்கு தேவை. அந்த ஆதரவை தொடர்ந்தும் கொடுங்கள். நன்றி.”
இது எனக்கு மூன்றாவது படம்.தயாரிப்பாளர் ராஜா சார். அவரை அண்ணன் என்று சொல்லவா, நண்பர் என்று சொல்லவா எனக்கு தெரியவில்லை. ஆனால் ஒன்று மட்டும் உறுதி – இந்த படத்தின் மூலம் ஒரு ஆழமான நட்பு உருவாகியுள்ளது.
இந்த படத்தைப் பற்றி சொல்ல வேண்டுமென்றால், கதை ரீதியாக இது ஒரு ஜானர் மிஸ்டேக் உள்ள படம். ஒரே ஜானருக்குள் அடக்க முடியாத கதை இது. முதலில் கேட்கும்போது இது ஹாரர் படம் மாதிரி தோன்றலாம்; அடுத்த நிமிஷம் திரில்லராக மாறும். அதற்குள் காமெடியும் கலந்து வரும்.“இது என்ன ஜானர்?” என்று கேட்டால், ஒரே வார்த்தையில் சொல்ல முடியாத படம்.

இன்றைக்கு நல்ல சினிமா எடுத்தவர்களுக்கு பின்னால் நிற்க வேண்டும் என்பதே மிக முக்கியமான விஷயம், அதுதான் இந்த விழாவின் உண்மையான அர்த்தம். எதற்கும் நேரமும் உடல் உழைப்பும் தேவைப்படும் இந்த காலகட்டத்தில், தொலைபேசி அழைப்பை மதித்து வந்து நீண்ட நேரம் காத்திருந்து வாழ்த்திய அனைவருக்கும் மனப்பூர்வமான நன்றி.
சினிமாவில் குவாலிட்டி, மரியாதை, ஒழுக்கம் போன்றவை வெளியே தெரியும் விஷயங்கள் அல்ல; அருகில் இருப்பவர்களுக்கே அது புரியும் தன்னால் முடியும் என்ற நம்பிக்கையோடு உழைக்கும் தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் இந்த நேரத்தில் எனது நன்றி.
பிக்பாஸுக்கு பிறகு என் படங்கள் பெரிதாக வரவில்லை ஆனால் கலைஞர் டிவியில் நான் செய்த ஷோ மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.
ஆரி படம் செய்வதில்லை அவருக்கு என்ன பிஸினஸ் இருக்கிறது என பலர் சொன்ன போதும், அதை கண்டுகொள்ளாமல், படத்தின் மீது நம்பிக்கை இருக்கிறது என இப்படத்தை தயாரித்த தயாரிப்பாளர் ராஜா அவர்களுக்கு நன்றி. இதில் எனது நண்பர்கள் பலரும் பணிபுரிந்துள்ளார்கள். அவர்கள் அனைவரும் இப்படத்திற்காக உண்மையாக உழைத்திருக்கிறார்கள். இப்படத்தில் நாங்கள் எல்லோரும் சண்டை போட்டுள்ளோம், ஆனால் அது எல்லாம் படத்திற்காக தான். படம் மிகச்சிறப்பாக வந்துள்ளது. இங்கு வெற்றி தான் எல்லாரையும் முன்னிறுத்துகிறது. வெற்றி பெற்றால் எல்லோரும் ஸ்டார் தான். எனக்கு பிக்பாஸுக்குப் பிறகு பெரிய வரவேற்பு இருப்பதாக பலர் சொன்னார்கள். எனக்கு என்ன வரவேற்பு இருக்கிறது என எனக்கு உண்மையிலேயே தெரியாது. நான் அதை எதையும் கண்டுகொள்வதில்லை. உண்மையான உழைப்பை தருவோம் என உழைத்துள்ளேன். கண்டிப்பாக எல்லோருக்கும் படம் பிடிக்கும் நன்றி.
இப்படத்தில் நடிகர் ஆரி அர்ஜுனன் நாயகனாக நடிக்க, நடிகை தீப்ஷிகா இதில் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் பவித்ரா, சுப்ரமணிய சிவா,தலைவாசல் விஜய் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர். தீர்க்கதரிசி என்ற திரைப்படத்தை பரபரப்பாக இயக்கியிருந்த எல். ஆர். சுந்தரபாண்டி அதே வேகத்தில் ஃபோர்த் ஃப்ளோர் படத்தை இயக்கியுள்ளார். தணிக்கை செய்யப்பட்ட இந்தபடம் யூ/ஏ தரச் சான்றிதழ் பெற்றுள்ளது என தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
“போடா போடி” படப்புகழ் தரண் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார், “போடா போடி”, வெண்ணிலா கபடி குழு” படங்களின் ஒளிப்பதிவாளர் J லக்ஷ்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார். அநீதி, ஜெயில் மற்றும் மத்தகம் வெப் சீரிஸிற்கு கலை இயக்கம் செய்த சுரேஷ் கல்லேரி கலை இயக்கம் செய்துள்ளார்.
செவன்த் ஸ்டுடியோ சார்பாக K.கண்ணன் இப்படத்தை தமிழ்நாடு தியேட்டர் வெளியீடு செய்கிறார். இப்படம் வரும் 27ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.









