சைபர் த்ரில்லர் திரைப்படமான அச்சுத அவதாரம் – ஃபர்ஸ்ட் லுக் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.
இந்தப் படத்தை பெங்களூரைச் சேர்ந்த இயக்குநர் புனித் இயக்குகிறார். இது அவரின் இயக்குநர் அறிமுகப் படம் ஆகும்; மிகவும் வித்தியாசமான முயற்சியாக உருவாகி வருகிறது.புனித் கடந்த 10 ஆண்டுகளாக கன்னட மற்றும் தமிழ் திரைப்பட உலகில் பணியாற்றி வருகிறார்.
உலகளாவிய சைபர் மோசடிகளின் இருண்ட உலகத்தை மையமாகக் கொண்ட இந்த கதை .இதன் தனித்துவம் என்னவென்றால், கேரளாவின் காசர்கோடு பகுதியில் உள்ள ஒரு சிறிய, பாரம்பரிய கிராமத்தை பின்னணியாகக் கொண்டது. உயர் தொழில்நுட்ப குற்ற உலகத்தையும், ஆழமான உள்ளூர் கலாச்சாரம் மற்றும் உணர்ச்சிகளையும் இணைக்கும் கதை இது. இந்தப் படம் ஒரு கலாச்சார சங்கம முயற்சியாகவும் பார்க்கப்படுகிறது.முக்கிய நடிகர்கள் மலையாள சினிமாவைச் சேர்ந்தவர்கள் —மாளவிகா நந்தன், அவினாஷ், சீமா ,முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்
படம் பற்றி இயக்குனர் கூறியது.. அந்த பகுதியின் கலாச்சாரத்தை நகலெடுக்க முயலவில்லை. குழுவினர் பல மாதங்கள் காசரகோடில் தங்கி, அங்குள்ள வாழ்க்கையை கவனித்து, கேட்டறிந்து, அந்த இடமே கதையை வடிவமைக்க அனுமதித்தனர்.மொழி சவால்களையும் அவர்கள் ஏற்றுக்கொண்டனர்; கதைதான் அவர்களுக்கு வழிகாட்டியாக இருந்தது.இந்தப் படம் hyperlink-முறை கதை சொல்லல் முறையில் உருவாகிறது.காட்சியமைப்பில் தனித்துவம் காணப்படுகிறது. இயக்குநர் Punith, விருது பெற்ற ஒளிப்பதிவாளர் Anand Meenakshi உடன் இணைந்து, இடத்துக்கு மரியாதை அளிக்கும் விதமாகவும், பெரிய திரையில் வித்தியாசமான அனுபவமாகவும் உருவாக்க முயன்றுள்ளனர்.
2026 மே மாதத்தில் மிகப்பெரிய வெளியீட்டிற்கு தயாராகிறது. நவீன சைபர் குற்றத் த்ரில்லர் அம்சங்களையும், பாரம்பரிய உணர்வுகளையும் இணைக்கும் இந்த முயற்சி, இந்த கோடையில் தென்னிந்திய சினிமாவில் ஒரு குறிப்பிடத்தக்க படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.








